எகிப்தில் பதட்டம் அதிகரிப்பு-இஸ்ரேலுக்கான காஸ் குழாய்கள் குண்டு வைத்துத் தகர்ப்பு

Subscribe to Oneindia Tamil

Egypt Protest
கெய்ரோ: எகிப்து போராட்டம் புதிய திசையில் திரும்புவதாக தெரிகிறது. இஸ்ரேலுக்குச் செல்லும் காஸ் குழாய்களை சிலர் குண்டு வைத்துத் தகர்த்துள்ளனர். இதையடுத்து இஸ்ரேல், ஜோர்டானுக்கு செல்லும் காஸ் குழாய்களின் இணைப்பை எகிப்து அதிகாரிகள் துண்டித்துள்ளனர்.

கடந்த 12 நாட்களாக அதிபர் முபாரக் பதவி விலகக் கோரி எகிப்தியர்கள் பெரும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதை ஒடுக்க பல வழிகளிலும் முபாரக் முயன்று வருகிறார். இருந்தாலும் எதிர்ப்பு அடங்குவதாக தெரியவில்லை.

இந்த நிலையில் சமீபத்தில் போராட்டக்காரர்கள் மீது முபாரக் ஆதரவாளர்கள் என்ற போர்வையில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பலர் உயிரிழந்தனர்.

இந்தப் பின்னணியில் நேற்று திடீரென இஸ்ரேல், ஜோர்டானுக்கு செல்லும் காஸ் குழாய்களைத் தகர்க்கும் வகையில் குண்டுவெடிப்புகள் நடந்துள்ளன. இதையடுத்து இந்த குழாய்களின் இணைப்புகளை எகிப்து அதிகாரிகள் தற்காலிகமாக துண்டித்துள்ளனர்.

இதை தீவிரவாத செயல் என்று எகிப்து அரசு வர்ணித்துள்ளது. எல் அரிஷ் என்ற இடத்தில் இந்த குண்டுவைப்பு நடந்துள்ளது. அப்பகுதியில் பல இடங்களில் காஸ் குழாய்களைத் தகர்க்கும் வகையில் குண்டுகள் வெடித்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்தப் புதிய செயலால் போராட்டத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலை வம்புக்கு இழுக்கும் முயற்சியாக இதை பார்க்கிறார்கள் எகிப்து அதிகாரிகள். ஆனால் இது தங்களது போராட்டத்தை சிதைக்க நடக்கும் சதிச் செயலாக போராட்டக்காரரர்கள் கூறுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+