ராசாவின் சிபிஐ காவல் மேலும் 2 நாள் நீட்டிப்பு-சந்தோலியா-பெகுரியாவுக்கு 14 நாள் சிறை

அதே நேரத்தில் அவருடன் கைது செய்யப்பட்ட முன்னாள் தொலைத் தொடர்புத்துறைச் செயலாளர் சித்தார்த் பெகுரியா, ராசாவின் முன்னாள் தனிச் செயலாளர் சந்தோலியா ஆகியோரின் சிபிஐ காவல் முடிவடைந்ததையடுத்து இருவரையும் 14 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
ராசா மற்றும் சந்தோலியா, பெகுரியாவின் ஆகியாரை கடந்த 2ம் தேதி சிபிஐ கைது செய்தது. இவர்களை 5 நாள் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இதையடுத்து கடந்த 5 நாட்களாக இந்த மூவரம் டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் தங்க வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர்.
இந்த 5 நாள் விசாரணையில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக ராசா அடைந்த லாபம், பணப் பரிவர்த்தனைகள் குறித்து தீவிரமாக விசாரிக்கப்பட்டது.
முன்னதாக நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்த கைது அறிக்கையில், ராசாவின் நடவடிக்கைகளால் நாட்டுக்கு ரூ. 22,000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. யூனிடெக், ஸ்வான் ஆகிய நிறுவனங்களுக்கு ஆதரவாக கடைசி நேரத்தில் விதிகளை மாற்றி ஸ்பெக்ட்ரத்தை ஒதுக்கினார் ராசா. இந்த இரு நிறுவனங்களுக்கு ஆதரவாக அவர் செயல்பட்டார். இதில் ஸ்வான் நிறுவனம் ரூ. 530 கோடி மட்டுமே கொடுத்து ஸ்பெக்ட்ரத்தை வாங்கியது. ஆனால், இதில் 40 சதவீத பங்குகளை மட்டுமே ரூ. 4,200 கோடிக்கு விற்றுள்ளது. இதனால் இதில் பெரும் முறைகேடு நடந்துள்ளது உறுதியாகிறது என்று கூறியுள்ளது.
இந் நிலையில் மூவரின் 5 நாள் காவல் இன்று முடிவடைவதையடுத்து பிற்பகலில் ராசா உள்ளிட்ட மூவரையும் சிபிஐ, நீதிமன்றத்தில் நீதிபதி ஓ.பி.சைனி முன் ஆஜர்படுத்தியது.
அப்போது சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ராசாவிடம் விசாரணை முடியடையவில்லை, அவர் .போதிய ஒத்துழைப்பைத் தரவில்லை, மேலும் கிடைத்துள்ள சில ஆவணங்களை ராசாவிடம் காட்டி உறுதிப்படுத்தப்பட வேண்டியுள்ளது. எனவே அவரை மேலும் 4 நாட்கள் தங்கள் காவலில் அனுப்புமாறு கோரினார். ஆனால், அவரை மேலும் 2 நாள் மட்டும் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதித்தார்.
அதே நேரத்தில் சந்தோலியா, பெகுரியாவிடம் விசாரணை முடிந்துவிட்டதாக சிபிஐ கூறியதால் அவர்களை 14 நாள் நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து ராசா மீண்டும் சிபிஐ தலைமை அலுவலகத்துக்கும், சந்தோலியா, பெகுரியா ஆகியோர் சிறைச்சாலைக்கும் கொண்டு செல்லப்பட்டனர்.
2 நாள் விசாரணை முடிவடைந்த பின் 10ம் தேதி ராசாவை ஆஜர்படுத்தவும் நீதிபதி உத்தரவிட்டார்.
சுப்ரீம் கோர்ட்டில் ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை வரும் 10ம் தேதி வர உள்ளது. அன்று சி.பி.ஐ. அதிகாரிகள், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளனர். அதற்கு 2 நாட்களே கால அவகாசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
விரைவில் நிரா ராடியா கைது?:
இந் நிலையில் அடுத்தக் கட்டமாக நிரா ராடியாவை கைது செய்ய சிபிஐ திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications