ஆசியாவின் மிகப்பெரிய விமான கண்காட்சி... பெங்களூரில் இன்று தொடங்குகிறது!

ஆசியாவின் மிகப்பெரிய விமான திருவிழா இந்த ஏரோ இந்தியா. சர்வதேச அளவிலான விமான கண்காட்சி இது. 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கிறது.
இந்த ஆண்டுக்கான விமான திருவிழா, பெங்களூர் எலஹங்காவில் உள்ள இந்திய விமானப்படை விமான நிலையத்தில் இன்று (புதன்கிழமை) தொடங்கி 13-ந் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது.
உலகின் பல்வேறு நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ள இந்த நிகழ்ச்சியில் அமெரிக்கா உள்ளிட்ட 160 நாடுகள் பங்கேற்கின்றன. விமான தயாரிப்பில் ஈடுபட்டுள்ள பல்வேறு நிறுவனங்களின் தயாரிப்புகள் விமான திருவிழாவையொட்டி நடைபெறும் கண்காட்சியில் இடம்பெறுகின்றன.
மேலும் அதிநவீன போர் விமானங்கள், மிகப்பெரிய பயணிகள் விமானம், அதிவேக போர் விமானங்கள் என்று 27 வகையான விமானங்கள் பார்வைக்கு வைக்கப்படுகின்றன.
விமான கண்காட்சியையொட்டி விமானங்களின் சாகச நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
தினமும் காலை 10 மணி முதல் மதியம் வரையிலும், பிற்பகலில் 2.30 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் விமான கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அப்போது விமானங்களின் சாகச நிகழ்ச்சிகளை பார்வையாளர்கள் கண்டுகளிக்கலாம். விமான திருவிழா முதல் நாளான இன்று காலையில் விமான சாகசங்கள் கிடையாது. பிற்பகலில் மட்டும் இந்த நிகழ்ச்சி நடைபெறும்.
விமானங்கள் விற்பனை:
இந்த கண்காட்சியில் விமானங்களும் விற்பனை செய்யப்படுகின்றன. கடந்த முறை இந்த திருவிழாவின்போது சுமார் ரூ.1.10 லட்சம் கோடிக்கு விமான வர்த்தகம் நடைபெற்றது. இந்த முறை அதை விட கூடுதலாக நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விமானங்கள் இயங்குவது மற்றும் அவற்றின் தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கம் அளிக்கவும் விமான கண்காட்சியில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
நடிகர் ஷாகித் கபூர்:
இந்த விழாவின் முக்கிய அம்சமாக அமெரிக்க போர் விமானத்தில்(எப்-16) பிரபல இந்தி நடிகர் ஷாகித் கபூர் பறக்கிறார். அதிவேகமாக செல்லக் கூடிய அந்த விமானத்தில் பறந்து செல்வதற்கு அவருக்கு அனுமதி கிடைத்துள்ளது.
இக்காட்சியை வருகிற 12-ந் தேதி(சனிக்கிழமை) பொதுமக்கள் கண்டுகளிக்கலாம். இந்த விமானத்தில் பறக்கும் முதல் இந்திய நடிகர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்துள்ளது.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications