ஜெயலலிதாவை அவதூராக பேசிய வழக்கில் நாஞ்சில் சம்பத்துக்கு அபராதம் : ரூ. 2,400 கட்டினார்
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நடைபெற்ற மதிமுக கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய வழக்கில் ம.தி.மு.க. கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் அபராதம் கட்டினார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 2003-ம் ஆண்டு பல்வேறு இடங்களில் ம.தி.மு.க. சார்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மதிமுக கொள்கை பரப்புச் செயலர் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் கடந்த 2009-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28-ம் தேதி நாஞ்சில் சம்பத் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால் அவர் அன்று ஆஜராகாததால், அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. அந்த பிடிவாரண்ட் தற்போது நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் நீதிமன்றத்தில் நாஞ்சில் சம்பத் ஆஜரானார். அப்போது மூன்று இடங்களில் உள்ள வழக்கிற்காக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டும் ஆஜராகாததால், வழக்கிற்கு தலா 800 ரூபாய் வீதம் 2,400 ரூபாயை இலவச சட்ட உதவி முகாமிற்கு கட்ட வேண்டும் என மாவட்ட நீதிபதி பஷீர் அகமது உத்தரவிட்டார்.
இதனை ஏற்றுக் கொண்டு நீதிபதி குறிப்பிட்ட தொகையை கட்டியதால் அவர் மீது உள்ள பிடிவாரண்ட் ரத்து செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications