லக்னோவில் +2மாணவி சுட்டுக்கொலை: பைக்கில் ஏற மறுத்ததால் கொடூரம்
லக்னோ: உத்தர பிரசேத்தில் பைக்கில் ஏற மறுத்த பிளஸ் டூ மாணவி சுட்டுக் கொல்லப்பட்டார். கடந்த 2 நாட்களுக்கு முன் தான் இங்கு செல்போன் நம்பர் கொடுக்க மறுத்த தேசிய அளவிலான கபடி வீராஙகனை சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்மை காலமாக காரணமே இல்லாமல் நடக்கும் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது சமூக ஆர்வலர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
லக்னோவைச் சேர்ந்தவர் சாக்ஷி சிங்( 18), பிளஸ் டூ மாணவி. அவரது பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் ஆஷீஸ் வர்மா (25). ஆஷீஸ் சாக்ஷியை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில் சாக்ஷி பள்ளிக்கு சென்று கொண்டிருக்கையில் அங்கு பைக்கில் வந்து வழி மறித்திருக்கிறார் ஆஷீஸ். தன்னுடன் பைக்கில் வருமாறு அழைத்தற்கு சாக்ஷி மறுத்துவிட்டார். உடனே அவர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் சாக்ஷியை சுட்டுக் கொன்றார். பின்னர் வீட்டுக்குச் சென்று தன்னைத் தானே சுட்டுக்கொண்டார். அவர் தற்போது மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார்.












Click it and Unblock the Notifications