ஆட்சியில் பங்கு-தேர்தலுக்கு முன்பே திமுகவிடம் உத்தரவாதம் பெற காங். நிர்வாகிகள் கோரிக்கை

ஆட்சியில் பங்கு என்பதில் அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளரான ராகுல் காந்தி திட்டவட்டமாக உள்ளார். இதை தேர்தலுக்குப் பின் பார்த்துக் கொள்ளலாம் என திமுக கூறியதை அவர் ஏற்கவில்லை.
இந் நிலையில் தேர்தலில் திமுகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேசுவதற்காக அமைக்கப்பட்ட ஐவர் குழுவில் உள்ள மத்திய அமைச்சர்கள் ப. சிதம்பரம், ஜி.கே. வாசன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன், நாமக்கல் ஜெயக்குமார் எம்.எல்.ஏ ஆகியோர் நேற்று நதங்களது கட்சியினருடன் ஆலோசனை நடத்தினர்.
எம்எல்ஏக்கள், எம்பிக்கள், தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஆகியோரிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. இதில் கட்சியில் புதிதாக சேர்ந்த எஸ்.வி.சேகரும் பங்கேற்றார்.
அப்போது பெரும்பாலான காங்கிரசார் திமுகவிடம் 70 முதல் 80 தொகுதிகளைப் பெற வேண்டும், ஆட்சியில் பங்கு கோர வேண்டும் என்ற ராகுல் காந்தியின் திட்டத்தையே முன் வைத்தனர். இது தொடர்பாக திமுகவிடம் தேர்தலுக்கு முன்பே உத்தரவாதத்தைப் பெற வேண்டும் என்றும் கோரினர்.
மேலும் இப்போது எம்.எல்.ஏக்களாக உள்ள எங்களுக்கு வரும் தேர்தலிலும் சீட் தர வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்தனர்.
அத்தோடு அதிமுக கூட்டணியில் தேமுதிக சேர்ந்தால் திமுக கூட்டணிக்கு கடும் சிக்கல் உருவாகும் என்பதால் பாமகவையும் சேர்க்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.
ஈவிகேஎஸ் ஆதரவாளர்கள் வெளிநடப்பு:
இந் நிலையில் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை குழுவில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை சேர்க்காததை கண்டித்து அவரது ஆதரவு எம்எல்ஏவான பழனிச்சாமி கூட்டத்திலிருந்து வெளியேறினார்.
இன்னொரு ஆதரவாளரான ராணி வெங்கடேசன் கூட்டத்தை புறக்கணித்தார்.
கருணாநிதியுடன் ஐவர் குழு சந்திப்பு:
இந்த ஆலோசனைகளைத் தொடர்ந்து காங்கிரஸ் ஐவர் குழு முதல்வர் கருணாநிதியை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தது. அப்போது திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலுவும் உடனிருந்தார்.
அப்போது தேர்தலில் திமுக கூட்டணி வென்றால், காங்கிரசுக்கு ஆட்சியில் பங்கு தர வேண்டும் என்ற தங்கள் கட்சியினரின் கோரிக்கை குறித்து கருணாநிதியிடம் ஐவர் குழுவினர் எடுத்துரைத்தனர்.
2வது நாளாக ஈவிகேஎஸ் ஆதரவாளர்கள் வெளிநடப்பு:
இந் நிலையில் இளங்கோவனை குழுவில் சேர்க்க வலியுறத்தி 8 மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் இன்று நடந்த ஐவர் குழு கூட்டத்தில் இருந்தும் வெளிநடப்பு செய்தனர்.
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications