காதலர்களை டிஸ்டர்ப் பண்ணா...!! - சைலேந்திர பாபு எச்சரிக்கை

அதேநேரம், பொதுமக்கள் முகம் சுழிக்காத வகையில் காதலர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
உலகம் முழுவதும் நாளை காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. கோவையிலும் காதலர் தினம் களைகட்ட தொடங்கியுள்ளது. காதலர்கள் ஒருவருக் கொருவர் அன்பை பரிமாறிக் கொள்வதற்கு ரோஜாபூ, வாழ்த்து அட்டைகள் மற்றும் பரிசு பொருட்களை வழங்குவது காதலர் தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகும்.
சிலர் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு, பூங்காக்கள் மற்றும் பொது இடங்களில் கட்டிப்பிடித்தும், முத்தம் கொடுத்தும் காதலர் தினத்தைக் கொண்டாடுவது தொடர்கிறது.
காதலர் தின கொண்டாட்டமென்பதே, இந்திய - தமிழ் கலாச்சாரத்துக்கு அந்நியமானது, அநாகரீகமானது என்று கூறி இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்புகள் காதலர் தினத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கடந்த இரு தினங்களாக வாழ்த்து அட்டை எரிப்பது, காதலர்களைத் துரத்துவது என போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இன்று, வரம்பு மீறி ஆங்காங்கே உணர்ச்சி வசப்படும் ஜோடிகளுக்கு தாங்களே திருமணம் செய்து வைக்க போவதாகவும் அறிவித்துள்ளனர்.
இந்த போராட்டங்கள் காரணமாக, பொது இடங்களில் காதலர் தினம் கொண்டாடுவதற்கு காதலர்கள் அச்சப்படும் நிலை உருவாகியுள்ளது. இது தொடர்பாக போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபு நிருபர்களிடம் கூறுகையில், "கோவையில் நாளை காதலர் தினம் கொண்டாட்டத்தின்போது காதல் ஜோடிகளுக்கு இடையூறு செய்தாலோ, அவர்கள் விருப்பத்திற்கு மாறாக செயல்பட்டாலோ சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள்.
கோவை வ.உ.சி. பூங்கா, காந்திபார்க், சிங்காநல்லூர் படகு இல்லம் உள்ளிட்ட பொழுது போக்கு பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காதலர் தினம் கொண்டாடுவதும் கொண்டாடாமல் இருப்பதும் அவரவர் இஷ்டம்.
காதலர்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும். அதே போல் மாநகர் முழுவதும் போலீசார் ரோந்து சுற்றி வருவார்கள். யாரையும் துன்புறுத்தக் கூடாது.
அதேபோல் காதல் ஜோடிகளும் பொதுமக்கள் முகம் சுளிக்கும் வகையில் நடந்து கொள்ளகூடாது...", என்றார்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை












Click it and Unblock the Notifications