காதலர்களை டிஸ்டர்ப் பண்ணா...!! - சைலேந்திர பாபு எச்சரிக்கை

அதேநேரம், பொதுமக்கள் முகம் சுழிக்காத வகையில் காதலர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
உலகம் முழுவதும் நாளை காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. கோவையிலும் காதலர் தினம் களைகட்ட தொடங்கியுள்ளது. காதலர்கள் ஒருவருக் கொருவர் அன்பை பரிமாறிக் கொள்வதற்கு ரோஜாபூ, வாழ்த்து அட்டைகள் மற்றும் பரிசு பொருட்களை வழங்குவது காதலர் தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகும்.
சிலர் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு, பூங்காக்கள் மற்றும் பொது இடங்களில் கட்டிப்பிடித்தும், முத்தம் கொடுத்தும் காதலர் தினத்தைக் கொண்டாடுவது தொடர்கிறது.
காதலர் தின கொண்டாட்டமென்பதே, இந்திய - தமிழ் கலாச்சாரத்துக்கு அந்நியமானது, அநாகரீகமானது என்று கூறி இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்புகள் காதலர் தினத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கடந்த இரு தினங்களாக வாழ்த்து அட்டை எரிப்பது, காதலர்களைத் துரத்துவது என போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இன்று, வரம்பு மீறி ஆங்காங்கே உணர்ச்சி வசப்படும் ஜோடிகளுக்கு தாங்களே திருமணம் செய்து வைக்க போவதாகவும் அறிவித்துள்ளனர்.
இந்த போராட்டங்கள் காரணமாக, பொது இடங்களில் காதலர் தினம் கொண்டாடுவதற்கு காதலர்கள் அச்சப்படும் நிலை உருவாகியுள்ளது. இது தொடர்பாக போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபு நிருபர்களிடம் கூறுகையில், "கோவையில் நாளை காதலர் தினம் கொண்டாட்டத்தின்போது காதல் ஜோடிகளுக்கு இடையூறு செய்தாலோ, அவர்கள் விருப்பத்திற்கு மாறாக செயல்பட்டாலோ சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள்.
கோவை வ.உ.சி. பூங்கா, காந்திபார்க், சிங்காநல்லூர் படகு இல்லம் உள்ளிட்ட பொழுது போக்கு பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காதலர் தினம் கொண்டாடுவதும் கொண்டாடாமல் இருப்பதும் அவரவர் இஷ்டம்.
காதலர்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும். அதே போல் மாநகர் முழுவதும் போலீசார் ரோந்து சுற்றி வருவார்கள். யாரையும் துன்புறுத்தக் கூடாது.
அதேபோல் காதல் ஜோடிகளும் பொதுமக்கள் முகம் சுளிக்கும் வகையில் நடந்து கொள்ளகூடாது...", என்றார்.
-
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை!












Click it and Unblock the Notifications