காதலர்களை டிஸ்டர்ப் பண்ணா...!! - சைலேந்திர பாபு எச்சரிக்கை

அதேநேரம், பொதுமக்கள் முகம் சுழிக்காத வகையில் காதலர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
உலகம் முழுவதும் நாளை காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. கோவையிலும் காதலர் தினம் களைகட்ட தொடங்கியுள்ளது. காதலர்கள் ஒருவருக் கொருவர் அன்பை பரிமாறிக் கொள்வதற்கு ரோஜாபூ, வாழ்த்து அட்டைகள் மற்றும் பரிசு பொருட்களை வழங்குவது காதலர் தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகும்.
சிலர் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு, பூங்காக்கள் மற்றும் பொது இடங்களில் கட்டிப்பிடித்தும், முத்தம் கொடுத்தும் காதலர் தினத்தைக் கொண்டாடுவது தொடர்கிறது.
காதலர் தின கொண்டாட்டமென்பதே, இந்திய - தமிழ் கலாச்சாரத்துக்கு அந்நியமானது, அநாகரீகமானது என்று கூறி இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்புகள் காதலர் தினத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கடந்த இரு தினங்களாக வாழ்த்து அட்டை எரிப்பது, காதலர்களைத் துரத்துவது என போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இன்று, வரம்பு மீறி ஆங்காங்கே உணர்ச்சி வசப்படும் ஜோடிகளுக்கு தாங்களே திருமணம் செய்து வைக்க போவதாகவும் அறிவித்துள்ளனர்.
இந்த போராட்டங்கள் காரணமாக, பொது இடங்களில் காதலர் தினம் கொண்டாடுவதற்கு காதலர்கள் அச்சப்படும் நிலை உருவாகியுள்ளது. இது தொடர்பாக போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபு நிருபர்களிடம் கூறுகையில், "கோவையில் நாளை காதலர் தினம் கொண்டாட்டத்தின்போது காதல் ஜோடிகளுக்கு இடையூறு செய்தாலோ, அவர்கள் விருப்பத்திற்கு மாறாக செயல்பட்டாலோ சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள்.
கோவை வ.உ.சி. பூங்கா, காந்திபார்க், சிங்காநல்லூர் படகு இல்லம் உள்ளிட்ட பொழுது போக்கு பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காதலர் தினம் கொண்டாடுவதும் கொண்டாடாமல் இருப்பதும் அவரவர் இஷ்டம்.
காதலர்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும். அதே போல் மாநகர் முழுவதும் போலீசார் ரோந்து சுற்றி வருவார்கள். யாரையும் துன்புறுத்தக் கூடாது.
அதேபோல் காதல் ஜோடிகளும் பொதுமக்கள் முகம் சுளிக்கும் வகையில் நடந்து கொள்ளகூடாது...", என்றார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications