காமன்வெல்த் ஊழல்: வெளிநாட்டு ஆலோசகர் என்ற பெயரில் ரூ.12.5 லட்சம் சுருட்டிய சசிதரூர்
டெல்லி: காமன்வெல்த் விளையாட்டு போட்டியின் போது, வெளிநாட்டு ஆலோசகர் என்ற பெயரில் முன்னாள் அமைச்சர் சசி தரூருக்கு 12 நாள் பணிக்காக, ரூ.12.5 லட்சம் சேவைக் கட்டணம் வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டு டெல்லியில் நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் நடந்த பல்லாயிரம் கோடி ஊழல் குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.இது தொடர்பாக காமன்வெல்த் ஒருங்கிணைப்புக் கமிட்டியின் தலைவர் சுரேஷ் கல்மாடியின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனைகள் நடந்தன. அவரது உதவியாளர் கைது செய்யப்பட்டார்.
போட்டிகளை எவ்வாறு சிறப்பாக நடத்துவது என்பது குறித்து ஆலோசனை வழங்க பல வெளிநாட்டு நிபுணர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். இதில் சசி தரூரும் அடக்கம்.
12 நாள் கூட்டத்துக்கு வந்த அவர் தந்த ஆலோசனைகளுக்காக ரூ. 12.5 லட்சம் அவருக்கு கட்டணம் வழங்கப்பட்டுள்ளது.
இந்தப் பணம் அவரது துபாய் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இப்போது இந்த முறைகேடு குறித்து சிபிஐ விசாரித்து வருகிறது.
2009ம் ஆண்டு சசி தரூர் மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சராக இருந்தபோது இந்தக் கட்டணம் தரப்பட்டுள்ளது. அமைச்சராக இருக்குநம் ஒருவர் தனிப்பட்ட முறையில் வேறு எந்த விதத்திலும் பணம் சம்பாதிக்க முடியாது. எனவே இதுபற்றி விசாரணை நடைபெறுகிறது.
இது குறித்து தரூர் கூறுகையில், நான் காமன்வெல்த் போட்டி ஏற்பாட்டாளர்களை விதத்திலும்அணுக வில்லை. அவர்கள்தான், என்னை அங்கு வந்து உரையாற்றும்படி கேட்டுக்கொண்டனர். அதன்பேரில் நான் சென்று ஆலோசனை வழங்கியதற்கான பணத்தை பெற்று இருக்கிறேன்.
இதில் எந்த முறைகேடு நடக்கவில்லை. பணத்தை அதிகாரப்பூர்வமாகவும், சட்டபூர்வமாகவும் வாங்கி இருக்கிறேன். துபாய் வங்கி கணக்கில் நான் பணத்தை பெற்றது முறைகேடு அல்ல.
இது, நான் ஒரு சிறிய உரை நிகழ்த்த பெறும் தொகையோடு ஒப்பிடும் போது மிகவும் குறைவு. ரிசர்வ் பாங்க் விதிமுறைப்படி வெளிநாடு வாழ் இந்தியர்கள், வங்கி கணக்குகளை வைத்துக் கொள்ளலாம். இதன்படியே, துபாயில் வங்கி கணக்கை வைத்திருந்தேன் என்றார்.
மத்திய அமைச்சராக இருந்தபோது ஐ.பி.எல். கொச்சி அணியின் ரூ. 70 கோடி மதிப்புள்ள பங்குகளை தன் 3வது மனைவி சுனந்தா புஷ்கருக்கு பெற்றுத் தந்து சர்ச்சையில் சிக்கியலர் தரூர் என்பது நினைவுகூறத்தக்கது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications