புதுச்சேரி முதல்வர் வீட்டை முற்றுகையிட முயற்சி : 350 ஸ்பின்கோ தொழிலாளர்கள் கைது
புதுச்சேரி: ஊதிய உயர்வு வழங்கக் கோரி புதுச்சேரி முதல்வர் வீட்டை முற்றுகையிட சென்ற திருபுவனை ஸ்பின்கோ தொழிலாளர்கள் 350 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுவை திருவாண்டார் கோவிலில் கூட்டுறவு நூற்பாலை (ஸ்பின்கோ) செயல்பட்டு வருகிறது. அங்கு 600-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். அவர்களுக்கு கடந்த 7 ஆண்டுகளாக ஊதிய உயர்வு தரக்கோரி பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அவர்கள் கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படாமலேயே இருக்கிறது. இதையடுத்து புதுவை முதல்வர் வைத்திலிங்கம் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர்.
அதன்படி சுதேசி மில் அருகே கூடிய தொழிலாளர்கள் அங்கிருந்து முதல்வர் இல்லம் நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர். ஆனால் அவர்கள் வெங்கடசுப்பா ரெட்டியார் சிலை அருகே சென்றபோது போலீசார் அவர்களை வழிமறித்தனர். இதனால் தொழிலாளர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. உடனே அவர்கள் நடுரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து போலீசார் சுமார் 350 பேரை கைது செய்து வேனில் ஏற்றினர். அப்போது தொழிலாளர்கள் 2 வேன்களின் கண்ணாடிகளை கள் வீசி உடைத்ததாகக் கூறப்படுகின்றது. ஸ்பின்கோ தொழிலாளர்களுக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக ஊதிய உயர்வே அளிக்கவில்லை என்று கூறப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
-
புதுச்சேரியில் ரூ100 பத்திரம்.. வீட்டு உபயோக பொருள் முதல் ரேஷன் கார்டு வரை கிஃப்ட்! லாபத்தில் மக்கள் -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி












Click it and Unblock the Notifications