தமிழகத்தில் 23 உதவி கமிஷ்னர்கள் உள்பட 120 டிஎஸ்பிக்கள் இடமாற்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகம் முழுவதும் டி.எஸ்.பி. அந்தஸ்தில் உள்ள 120 போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் சென்னையில் பணியாற்றும் 23 உதவி கமிஷ்னர்களும் அடக்கம்.

தேர்தல் நடைபெற உள்ளதையடுத்து, ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் மற்றும் சொந்த ஊரில் பணியாற்றும் ஐ.பி.எஸ், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என்பது தேர்தல் கமிஷனின் விதி.

இதையடுத்து கடந்த 3 நாட்களுக்கு முன் ஒரே நேரத்தில் 68 உயர் போலீஸ் அதிகாரிகள் இடம் மாற்றப்பட்டனர். இதில 34 அதிகாரிகளுக்கு பதவி உயர்வோடு இடமாறுதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் 120 டி.எஸ்.பிக்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் சென்னையில் பணியாற்றும் 23 உதவி போலீஸ் கமிஷனர்களும் அடக்கம்.

சென்னை வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர், புளியந்தோப்பு, எம்.கே.பி. நகர், எழும்பூர், உயர் நீதிமன்றம், மயிலாப்பூர், வடபழனி, பூக்கடை பஜார், அசோக்நகர், துரைப்பாக்கம், சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை, ராயப்பேட்டை, அயனாவரம் பகுதி உதவி கமிஷ்னர்கள் உள்ளி்ட்ட அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதே போல மதுரை, சேலம்,திருச்சி, திருநெல்வேலி ஆகிய மாநகரக் காவல் எல்லையில் உள்ள பல்வேறு சரக உதவி கமிஷனர்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், கடலூர், நாமக்கல், அரியலூர், நாகப்பட்டினம், விழுப்புரம், திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, தேனி, நீலகிரி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் டி.எஸ்.பிக்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+