கூட்டணி தர்மம் குறித்த பிரதமரின் கருத்தால் காங்கிரசுடன் உறவு பாதிக்காது-திமுக

Subscribe to Oneindia Tamil

Karunanidhi
சென்னை: ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில் ராசா தான் எல்லாவற்றையும் செய்தார், அமைச்சரவையில் கூட அது தொடர்பாக அவர் ஆலோசிக்கவில்லை. முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற முறை எப்படி அமல்படுத்தப்பட்டது?, ஏன் ஏல முறை பின்பற்றப்படவில்லை? என்பது எனக்குத் தெரியாது.

ஆனால், இது குறித்து மீடியாக்கள் செய்திகளை வெளியிட ஆரம்பித்தவுடன் இந்த விஷயத்தில் வெளிப்படையாக செயல்படுமாறு அவருக்கு நான் அறிவுறுத்தி கடிதம் கூட எழுதினேன். மற்றபடி ஒதுக்கீட்டில் நடந்த விவகாரங்கள் எதுவுமே எனக்குத் தெரியாது என்று பிரதமர் மன்மோகன் சிங் நேற்று நிருபர்களிடம் கூறினார். இதன்மூலம் எல்லா தவறுகளுக்கும் ராசா தான் காரணம் என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறிவிட்டார்.

மேலும் நான் தவறே செய்யாதவன் என்று சொல்ல மாட்டேன். ஆனால் நடந்த சில சம்பவங்களுக்காக நான் மிகப்பெரிய குற்றவாளி ஆக்கப்பட்டு இருக்கிறேன்.
ஊழல் செய்தவர்கள் எந்த பதவியில் இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். யார் ஊழல் செய்து இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

திமுகவுடன் கூட்டணி குறித்த கேள்விக்கு கூட்டணி தர்மத்தின்படிதான் ராசாவை இரண்டாவது முறையாகவும் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக நியமித்தேன், அவரை நியமிக்கச் சொன்னது திமுக தான். கூட்டணி தர்மத்துக்காக சில விஷயங்களில் விட்டுக் கொடுத்து தான் போக வேண்டியுள்ளது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளதால், திமுகவை மத்திய அரசில் காங்கிரஸ் வேண்டா வெறுப்பாகத்தான் வைத்துள்ளது என்றரீதியில் பேச்சு எழுந்துள்ளது.

இதனால் இனிமேலும் காங்கிரஸ் கூட்டணியில் திமுக தொடரக் கூடாது என்று எதிர்க் கட்சிகள் கூறியுள்ளன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியத் தலைவர்களில் ஒருவரான டி.ராசா கூறுகையில், இவ்வளவு அசிங்கப்பட்ட பிறகும் காங்கிரஸ் கூட்டணியில் திமுக தொடர்வது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து கூட்டணி கூட்டணி அரசியல் குறித்து பிரதமர் மன்மோகன் சிங்கின் கருத்து குறித்து திமுக எம்பியும் செய்தித் தொடர்பாளரும் டி.கே.எஸ்.இளங்கோவன் கூறுகையில்,

திமுக-காங்கிரஸ் இடையேயான கூட்டணி உறவு பற்றி பிரதமர் மன்மோகன் சிங் எதையும் தவறாகச் சொல்லவில்லை. அவர் அதுபற்றி தவறாக எதையும் கூறியதாக நான் கருதவில்லை. திமுக-காங்கிரஸ் கூட்டணி உறவை அவர் குறை கூறவில்லை.

தகவல் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) பரிந்துரைகளைத்தான் பின்பற்றியதாகவும், தனக்கு முன்பாக பொறுப்பில் இருந்தவர்களின் நடைமுறையைத்தான் தானும் பின்பற்றியதாகவும் ஏற்கனவே ராசா தெளிவாகக் கூறியுள்ளார் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+