தமிழர்கள் நிலை அறிய ராகுல் தலைமையில் குழு இலங்கை செல்லும்-யுவராஜா

நிருபர்களிடம் பேசிய அவர், வரும் சட்டமன்றத் தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு திருப்பு முனையாக அமையும். இளைஞர் காங்கிரசில் 14 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். இந்த எண்ணிக்கை புதிய மாற்றத்தையும் ஏற்படுத்தும். காங்கிரஸ்-திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெறும்.
இளைஞர் காங்கிரசுக்கு 20க்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கேட்போம். காங்கிரஸ் கட்சிக்கு சீட் ஒதுக்குவதில் திமுக உரிய மரியாதையைத் தர வேண்டும். தேர்தல் வெற்றியை நிர்ணயிக்கும் சக்தியாக காங்கிரஸ் விளங்கும்.
மீனவர்கள் எல்லை தாண்டி செல்லாமல் இருக்க எல்லைக்கோடு அமைக்க வேண்டும். இதை மத்திய அரசிடம் வலியுறுத்துவோம். இலங்கை தமிழர்களுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி ஒருபோதும் செயல்படாது. ராஜபக்சே மனித இனத்திற்கு எதிரானவர். ஹிட்லரை போல சர்வாதிகார ஆட்சி நடத்தி தமிழர்களை கொன்று குவித்துள்ளார்.
தமிழகத்தில் பா.கவை கூட்டணியில் சேர்க்க வேண்டாம் என சோனியா காந்தி ஒருபோதும் கூறவில்லை. அவ்வாறு வெளிவந்த தகவல் முற்றிலும் தவறானவை. கூட்டணி கட்சியாக இருந்தாலும் திமுக அரசு செய்த தவறுகளை இளைஞர் காங்கிரஸ் சுட்டி காட்டியதே தவிர, திமுக மீது எந்தவித வெறுப்பும் இல்லை. இதை துணை முதல்வர் ஸ்டாலின் புரிந்து கொண்டுள்ளார்.
காங்கிரசுக்கு 80க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு உள்ளதால் கூடுதல் இடங்களை கேட்க முடிவு செய்துள்ளோம். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைவது உறுதியாகிவிட்டது. ஸ்பெக்ட்ரம் விவகாரம் தேர்தல் கூட்டணியை பாதிக்காது.
இலங்கையில் வாழும் தமிழர்களின் நிலையை அறிய ராகுல்காந்தி தலைமையில் 10 பேர் கொண்ட குழு இலங்கைக்கு சென்று ஆய்வு நடத்த உள்ளது என்றார்.
ராகுலின் சர்பிரைஸ் கோழிக்கோடு விசிட்:
இந் நிலையில் நேற்று மாலை ரகசியமாக கோழிக்கோடு வந்தார். அங்கிருந்து அவர் எங்கு சென்றார் என்ற தகவல் தெரியாமல் கேரள போலீசார் திணறி வருகின்றனர்.
நேற்று மாலை 6 மணி அளவில் பெங்களூரில் இருந்து வந்த தனியார் விமானத்தில் ஒரு விவிஐபி வருவதாக கோழிக்கோடு விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. விமானம் வந்த பிறகுதான் அது ராகுல்காந்தி என அவர்களுக்கு தெரிய வந்தது. விமானத்தில் இருந்து இறங்கிய ராகுல் உடனே அங்கு நிறுத்தப்பட்டிருந்த காரில் ஏறி புறப்பட்டுச் சென்றார். அவரை தொடர்ந்து 2 காரில் தேசிய பாதுகாப்பு படை கமாண்டோக்கள் சென்றனர்.
அதற்குபிறகுதான் கோழிக்கோடு போலீசாருக்கு ராகுல் வந்த தகவல் தெரிந்தது. அங்குள்ள ராமநாட்டுகரை ஓய்வு விடுதியில் அவர் இரவு தங்குவார் என கூறப்பட்டது. இதையடுத்து போலீசார் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை முடக்கி விட்டனர். ஆனால் கோழிக்கோட்டில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராகுல் பின்னர் காரில் மைசூர் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. நேற்று இரவு வெகுநேரம் வரை ராகுல் எங்கிருக்கிறார் என்ற தகவல் கோழிக்கோடு போலீசாருக்கு கிடைக்கவில்லை. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications