தூத்துக்குடி அரசு மருத்துவமனை உணவில் புழுக்கள்-நோயாளிகள் அதிர்ச்சி

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: அரசு மருத்துவமனையில் வழங்கப்பட்ட உணவில் புழுக்கள் இருந்ததால் அது குறித்து மாவட்டக் கலெக்டரிடம் புகார் அளி்க்கப்பட்டது.

தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் பகுதியைச் சேர்ந்த அந்தோணிராஜ் மகன் சஞ்சய்க்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 601 வது வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதே வார்டு பகுதியில் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஒன்றிய புதிய தமிழகம் செயலாளர் மற்றும் மனித உரிமை அமைப்பு நிர்வாகி கென்னடி உறவினர் முத்தையாபுரம் சூசைராஜ் உடல்நலக்குறைவு காரணமாக உள் நோயாளியாக அனுமதிக்கப்ட்டார்.

இந்த நிலையில் நேற்று மதியம் நோயாளிகளுக்கு சாதம், கீரை கூட்டு, குழம்பு போன்றவை வழங்கப்பட்டன.

இதில் சிறுவன் சஞ்சய்-க்கு வழங்கப்பட்ட உணவில் குறிப்பாக கீரை கூட்டில் பெரிய பெரிய புழுக்கள் நெழிந்ததை பார்த்து அதிர்ச்சியடைதனர்.

இதனையடுத்து அந்த வார்டில் இருந்த கென்னடி புழு இருந்த சாப்பாட்டை அப்படியே தட்டுடன் மாவட்ட கலெக்டரிடம் புகார் செய்ய அனுப்பி வைத்தார். இது போன்று நடப்பது முதல் முறையல்ல. இது குறித்து பல முறை உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் முறையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகின்றது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+