கறுப்புப் பண கணக்கு: சோனியாவிடம் மன்னிப்புக் கேட்ட அத்வானி!
Subscribe to Oneindia Tamil

சோனியா காந்தியும் அவர் கணவர் ராஜீவ் காந்தியும் ஸ்விட்சர்லாந்து உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப் பண கணக்கு வைத்திருப்பதாக பாஜக குற்றம் சாட்டியிருந்தது.
பின்னர் இது தொடர்பாக பாஜக தலைமைக்கு சோனியா காந்தி ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில், தனக்கோ தன் கணவருக்கோ எந்த வெளிநாட்டு வங்கியிலும் கணக்கு கிடையாது என்றும், அப்படி இருந்தால் தாராளமாக நிரூபிக்கலாம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த விவரத்தை சோனியா காந்தி முன்பே வெளிப்படையாகத் தெரிவித்திருந்தால், பாஜக குற்றம் சாட்டவேண்டிய அவசியமே இருந்திருக்காது என்றும், தவறான குற்றச்சாட்டுக்காக வருத்தமும் மன்னிப்பும் தெரிவித்துக் கொள்வதாகவும் அத்வானி பதில் கடிதம் எழுதியுள்ளார்.












Click it and Unblock the Notifications