உலககோப்பை கிரிக்கெட்: டாஸ் வென்றது வங்கதேசம்-இந்தியா முதலில் பேட்டிங்

டாஸ் வென்ற வங்கதேச அணி பெளலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து இந்தியா முதலில் பேட்டிங் செய்கிறது. துவக்க ஆட்டக்காரர்களான டெண்டுல்கரும், வீரேந்திர ஷேவாகும் களமிறங்குகின்றனர்.
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலகக் கோப்பை போட்டிகள் இம்முறை இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேச நாடுகளால் இணைந்து நடத்தப்படுகிறது.
உலகக் கோப்பை போட்டியின் ஆட்டங்கள் இன்று துவங்குகின்றன. மிர்பூர் மைதானத்தில் நடைபெறும் இந்தியா, வங்கதேசம் இடையே முதல் போட்டி நடக்கிறது.
உலகக் கோப்பையை முன்னிட்டு நடைபெற்ற இரண்டு பயிற்சி ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற உற்சாகத்தோடு இந்தியா இந்த போட்டியில் களமிறங்குகிறது.
காயம் காரணமாக பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்காத வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர்கான் நாளைய போட்டியில் களமிறங்க உள்ளார்.
வங்கதேச அணி வலுவான இந்தியாவை சமாளிக்க சுழல்பந்து வீச்சை நம்பியிருப்பதாக அதன் கேப்டன் சாகித் ஹசன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications