மதுரை சாப்ட்வேர் பார்க் நாளை திறப்பு

மதுரை அருகே இலந்தைக்குளத்தில் 28 ஏக்கர் பரப்பில் சிறப்பு பொருளாதார மண்டலத்தின் கீழ் ரூ. 11 கோடி செலவில் தகவல் தொழில் நுட்ப பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதில் 66,000 சதுர அடியில் பல அடுக்கு கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.
இந்தப் பூங்காவை தமிழக தொழில்நுட்பத்துறை அமைச்சர் பூங்கோதை, எல்காட் நிறுவன இயக்குனர் சந்தோஷ் பாபு, வட்டாட்சியர் அர்ஜூணன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் சந்தோஷ்பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இலந்தைகுளத்தில் தகவல் தொழில் நுட்ப பூங்கா பணி முழுமையாக முடிவடைந்து விட்டது. இங்கு தற்போது இரண்டு பெரிய சாப்ட்வேர் நிறுவனங்கள் தங்களது கிளைகளைத் தொடங்கவுள்ளன.
மதுரை அருகே உள்ள வடபழஞ்சியிலும் 45 ஏக்கர் நிலப்பரப்பில் மற்றொரு தகவல் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது.
இலந்தைகுளம் தகவல் தொழில் நுட்ப பூங்காவை பிப்ரவரி 19ம் தேதி முதல்வர் கருணாநிதி சென்னையில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைக்கிறார் என்றார்.












Click it and Unblock the Notifications