மதுரை-நெல்லை ஐடி பூங்காக்கள் திறப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: மதுரை இலந்தைக் குளத்திலும் மற்றும் நெல்லை கங்கைகொண்டனிலும் அமைக்கப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்பப் பூங்காக்களை முதல்வர் கருணாநிதி இன்று திறந்து வைத்தார்.
தலைமைச் செயலகத்தில் இருந்தபடி வீடியோ கான்பரன்சிங் மூலம் இவற்றை முதல்வர் திறந்து வைத்தார்.
எல்காட் சார்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த பூங்காக்களுடன் சென்னையில் அமைக்கப்ப்பட்டுள்ள மாநில தரவு மையத்தையும் அவர் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியின்போது அமைச்சர்கள் பொன்முடி, தா.மோ.அன்பரசன், பூங்கோதை, திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு உடனிருந்தனர்.












Click it and Unblock the Notifications