சொத்து குவிப்பு வழக்கு-ஜெவிடம் விளக்கம் பெற நீதிமன்றம் முடிவு

குற்றவியல் தண்டனைச் சட்டம் 313 (1) (b) பிரிவின் கீழ் குற்றவாளிகளின் கருத்துகளைக் கேட்டறிய நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
இந்த வழக்கில் மொழிபெயர்ப்பில் உள்ள தவறுகள் தொடர்பாக ஜெயலலிதா தரப்பு மீண்டும் தாக்கல் செய்த மனுக்களை நீதிபதி தள்ளுபடி செய்தார்.
இந்த வழக்கு கடந்த 14ம் நீதிபதி மல்லிகார்ஜுனையா முன் விசாரணைக்கு வந்தபோது, சாட்சியங்களின் வாக்குமூலங்களை தமிழில் இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததில் இருந்த தவறுகளைச் சரி செய்து, திருத்தங்களைப் சேர்க்கையாக அளித்துள்ளதால் கோர்வையாகப் படிக்க முடியவில்லை என்றும், சரியான மொழிபெயர்ப்பை சம்பந்தப்பட்ட பகுதிகளில் சேர்த்த பிறகு அடுத்தகட்ட விசாரணையைத் தொடங்க வேண்டும் என்றும் கோரி ஜெயலலிதாவின் வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன் மனு தாக்கல் செய்தார்.
17 சாட்சிகளின் மொழிபெயர்ப்பில் உள்ள தவறுகளைச் சரி செய்ய வேண்டும் என்றும் மீதமுள்ள சாட்சிகளின் மொழிபெயர்ப்பில் உள்ள தவறுகளைச் சுட்டிக் காட்டுவதற்கு மேலும் 4 வாரம் கால அவகாசம் அளிக்க வேண்டும் என்றும் ஜெயலலிதா தரப்பு கோரியது.
இந்தக் கோரிக்கைகள் அடங்கிய 3 மனுக்களையும் தள்ளுபடி செய்த நீதிபதி மல்லிகார்ஜுனையா, விசாரணைக்கு தேவைப்படும்போது திருத்தப்பட்ட மொழிபெயர்ப்புகள் சம்பந்தப்பட்ட பகுதிகளில் இணைக்கப்படும். அவசியம் ஏற்பட்டால் தவறான மொழிபெயர்ப்புகளைத் திருத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். மொழிபெயர்ப்பில் தவறு என்ற காரணத்துக்காக விசாரணை நடவடிக்கையைத் தள்ளிப்போட வேண்டிய அவசிமில்லை என்றார்.
மேலும் குற்றவியல் தண்டனைச் சட்டம் 313 (1) (b) பிரிவின் கீழ் குற்றவாளிகளின் கருத்துகளைக் கேட்டறியவும் முடிவு செய்துள்ளதாகக் கூறி வழக்கு விசாரணையை மார்ச் 9ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
இந்த வழக்கில் ஜெயலலிதா தவிர சசிலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஜெயலலிதா உள்ளிட்ட இந்த 4 பேரிடமும் இந்த வழக்குத் தொடர்பான பொதுவான கேள்விகளை எழுப்பி பதில் பெற நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
இதற்காக நேரில் ஆஜராக வேண்டும் என்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு நீதிபதி உத்தரவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம்












Click it and Unblock the Notifications