சொத்து குவிப்பு வழக்கு-ஜெவிடம் விளக்கம் பெற நீதிமன்றம் முடிவு

குற்றவியல் தண்டனைச் சட்டம் 313 (1) (b) பிரிவின் கீழ் குற்றவாளிகளின் கருத்துகளைக் கேட்டறிய நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
இந்த வழக்கில் மொழிபெயர்ப்பில் உள்ள தவறுகள் தொடர்பாக ஜெயலலிதா தரப்பு மீண்டும் தாக்கல் செய்த மனுக்களை நீதிபதி தள்ளுபடி செய்தார்.
இந்த வழக்கு கடந்த 14ம் நீதிபதி மல்லிகார்ஜுனையா முன் விசாரணைக்கு வந்தபோது, சாட்சியங்களின் வாக்குமூலங்களை தமிழில் இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததில் இருந்த தவறுகளைச் சரி செய்து, திருத்தங்களைப் சேர்க்கையாக அளித்துள்ளதால் கோர்வையாகப் படிக்க முடியவில்லை என்றும், சரியான மொழிபெயர்ப்பை சம்பந்தப்பட்ட பகுதிகளில் சேர்த்த பிறகு அடுத்தகட்ட விசாரணையைத் தொடங்க வேண்டும் என்றும் கோரி ஜெயலலிதாவின் வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன் மனு தாக்கல் செய்தார்.
17 சாட்சிகளின் மொழிபெயர்ப்பில் உள்ள தவறுகளைச் சரி செய்ய வேண்டும் என்றும் மீதமுள்ள சாட்சிகளின் மொழிபெயர்ப்பில் உள்ள தவறுகளைச் சுட்டிக் காட்டுவதற்கு மேலும் 4 வாரம் கால அவகாசம் அளிக்க வேண்டும் என்றும் ஜெயலலிதா தரப்பு கோரியது.
இந்தக் கோரிக்கைகள் அடங்கிய 3 மனுக்களையும் தள்ளுபடி செய்த நீதிபதி மல்லிகார்ஜுனையா, விசாரணைக்கு தேவைப்படும்போது திருத்தப்பட்ட மொழிபெயர்ப்புகள் சம்பந்தப்பட்ட பகுதிகளில் இணைக்கப்படும். அவசியம் ஏற்பட்டால் தவறான மொழிபெயர்ப்புகளைத் திருத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். மொழிபெயர்ப்பில் தவறு என்ற காரணத்துக்காக விசாரணை நடவடிக்கையைத் தள்ளிப்போட வேண்டிய அவசிமில்லை என்றார்.
மேலும் குற்றவியல் தண்டனைச் சட்டம் 313 (1) (b) பிரிவின் கீழ் குற்றவாளிகளின் கருத்துகளைக் கேட்டறியவும் முடிவு செய்துள்ளதாகக் கூறி வழக்கு விசாரணையை மார்ச் 9ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
இந்த வழக்கில் ஜெயலலிதா தவிர சசிலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஜெயலலிதா உள்ளிட்ட இந்த 4 பேரிடமும் இந்த வழக்குத் தொடர்பான பொதுவான கேள்விகளை எழுப்பி பதில் பெற நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
இதற்காக நேரில் ஆஜராக வேண்டும் என்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு நீதிபதி உத்தரவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications