2 ஜி: கருணாநிதி குடும்பத்தாரை சி.பி.ஐ கைது செய்ய வேண்டும்-அதிமுக எம்.பி. கே.வி. இராமலிங்கம்
ஈரோடு: 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக கருணாநிதியையும், அவரது குடும்பத்தாரையும் சி.பி.ஐ. கைது செய்து விசாரிக்க வேண்டும் என்று அதிமுக எம்.பி. கே.வி. ராமலிங்கம் வலியுறுத்தியுள்ளார்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் 63 வது பிறந்த நாள் விழா ஆலோசனைக் கூட்டம் ஈரோடு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு சார்பில் அதன் செயலாளர் செல்வக்குமார் சின்னையன் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் கே.வி. இராமலிங்கம் எம்.பி. கலந்து கொண்டு பேசிதாவது,
2ஜி ஸ்பெக்ரம் ஊழல் குறித்து ஒவ்வெரு நாளும் பல்வேறு செய்திகளும், தகவல்களும் வெளி வந்த வண்ணம் உள்ளன. அரசியல் புரோக்கர் நீரா ராடியாவுடன் கருணாநிதி துணைவி ராஜாத்தி அம்மாள் மற்றும் அவரது மகள் கனிமொழி ஆகியோர் தொலைபேசியில் பேசியிருக்கின்றனர். இந்த பேச்சுக்கள் பொது மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
கருணாநிதியின் குடும்ப டி.வி.-யான கலைஞர் டி.வி.யில் சி.பி.ஐ ரெய்டு நடத்தியது போல 2 ஜி ஊழலில் சம்பந்தம் உடைய கருணாநியையும், அவரது குடும்பத்தையும் சி.பி.ஐ. விசாரித்து கைது செய்ய வேண்டும்.
2 ஜி ஊழல் இந்தியாவின் மிகப் பெரிய ஊழல் ஆகும். ஆனால் பிரமதர் இது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்கிறார். தன்னைமீறி ஆ.ராசா செயல்பட்டதாகவும் கூறியுள்ளார். கூட்டணி தர்மத்திற்காக ராசா கொள்ளை அடித்துள்ளது தெரிய வந்துள்ளது.
கூட்டணி தர்மத்தை காரணம் காட்டி தகுதியற்ற அயோக்கியர்களை மத்திய அமைச்சர் ஆக்கியிருக்கிறார்கள். நீண்ட போராட்டத்திற்கு பிறகே மத்திய அரசு கூட்டுக் குழு விசாரணைக்கு சம்மதம் தெரிவித்துள்ளது. இதை முன்பே செய்திருந்தால் உலக நாடுகள் மத்தியில் இந்தியாவிற்கு அவப்பெயர் ஏற்பட்டிருக்காது என்றார்.












Click it and Unblock the Notifications