வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த 7 நெல்லை அதிகாரிகளுக்கு சிக்கல்
நெல்லை: அளவுக்கு அதிகமாக அதிகாரிகள் சொத்து சேர்த்துள்ளதாக வந்துள்ள புகாரை அடுத்து தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதில் நெல்லை மாவட்டத்தில் மட்டும் 7 அதிகாரிகள் சிக்கியுள்ளனர். அவர்களிடம் போலீசார் ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் ஏழை மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக ஏழை பெண்களின் திருமண உதவி திட்டம், கர்ப்பிணி பெண்களுக்கு நிதியுதவி அளிக்கும் திட்டம், இலவச வீடு கட்டும் திட்டம் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் லட்சக்கணக்கானோர் பயனடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி மனோகர குமார், இன்ஸ்பெக்டர் எஸ்கால் மற்றும் போலீசார் ரகசியமாக அதிகாரிகளை கண்காணித்து விசாரித்து வருகின்றனர். நெல்லை மாவட்டத்தில் அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 7 அதிகாரிகள் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் விசாரணை வளையத்திற்குள் சிக்கி உள்ளனர். இதில் பொது பணிதுறையில் 3 அதிகாரிகள், நெடுஞ்சாலை துறையில் 2 அதிகாரிகள், மருத்துவ துறையில் ஒரு அதிகாரி அடக்கம். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. திடீர் பணக்காரர்களையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கண்காணித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications