தெலுங்கானா விவகாரத்தால் பெரும் அமளி-லோக்சபா ஒத்திவைப்பு
டெல்லி: தெலுங்கானா விவகாரம் தொடர்பாக அமளி ஏற்பட்டதைத் தொடர்ந்து லோக்சபா ஒத்திவைக்கப்பட்டது.
ஜேபிசி விசாரணை தேவை என்ற கோரிக்கையுடன் கடந்த குளிர்காலக் கூட்டத் தொடரை எதிர்க்கட்சிகள் முடக்கி வைத்து வந்த நிலையில், இதற்கு நேற்றுதான் தீர்வு ஏற்பட்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் சுமூக நிலைக்கு வந்தன.
இந்த நிலையில் இன்று நாடாளுமன்றத்தில் தெலுங்கானா விவகாரம் வெடித்தது. தெலுங்கானா ராஷ்டிரிய சமிதிக் கட்சி உறுப்பினர்கள் அக்கட்சித் தலைவர் சந்திரசேகர ராவ் தலைமையில் தெலுங்கானா தனி மாநிலக் கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட ஆரம்பித்தனர்.
சபாநாயகர் மீரா குமாரின் இருக்கை முன்பு திரண்டு அவர்கள் கோஷமிட்டனர். இதனால் சபையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து 12 மணி வரை முதலில் ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் மீண்டும் அவை கூடியபோதும் தெலுங்கானா கோரிக்கையை எழுப்பி அமளியில் குதித்தனர் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியினர். இதனால் மறுபடியும் 2 மணி வரை அவையை ஒத்திவைத்து மீரா குமார் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications