சட்டமன்றத் தேர்ர்தல்-துப்பாக்கிகளை ஒப்படைக்க உத்தரவு
சென்னை: தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருப்பவர்கள் தங்கள் துப்பாக்கிகளை போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும். தேர்தல் பணிக்காக தனி போலீஸ் படை அமைக்கப்பட்டுள்ளது என்று சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் வரும் மே மாதம் நடக்கவிருக்கிறது. இதையடுத்து காவல் துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தீவிர நடவடிக்கைகள் எடுக்கத் துவங்கியுள்ளனர்.
இது குறித்து சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறியதாவது,
சென்னையில் சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் செய்வதற்காக கூடுதல் துணைக் கமிஷனர் முத்தரசி தலைமையில் தேர்தல் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. இதில் இன்ஸ்பெக்டர்கள், போலீசார் இடம் பெற்றுள்ளனர்.
இந்த பிரிவில் உள்ளவர்கள் தேர்தல் நேரத்தில் செய்ய வேண்டிய பணிகள், வாக்குச் சாவடிகளில் செய்ய வேண்டிய ஏற்பாடுகள் மற்றும் பதற்றமான ஓட்டுச் சாவடிகள், மிக பதற்றமான ஓட்டுச் சாவடிகள் ஆகியவை பற்றி கணக்கொடுப்பார்கள். சென்னையில் இதுவரை 3 ஆயிரம் வாக்குச்சாவடிகள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
தேர்தலின்போது செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேற்று முன்தினம் மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆய்வுகள் மேற்கொண்டோம். அடுத்த மாதம் முதல் வாரத்தில் சென்னை போலீஸ் அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொள்ளும் ஒரு கூட்டம் நடக்கிறது.
சென்னையில் லயோலா கல்லூரி, ராணிமேரி கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய 3 இடங்களில் ஓட்டுக்கள் எண்ணப்படும். எனவே, இங்கு பாதுகாப்பு குறித்து ஆய்வுகள் செய்து முடிக்கப்பட்டுள்ளது. இதுவரை பதற்றமான தொகுதிகள், மிக பதற்றமான தொகுதிகள் பற்றி மட்டுமே கணக்கிடப்பட்டு வந்தது.
ஆனால் வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் மிக, மிக பதற்றமான தொகுதிகள், வாக்குச்சாவடிகள் எவை எவை என்றும் கணக்கெடுத்து வருகிறோம். சென்னையில் தேர்தலை அமைதியான முறையில் நடத்துவதற்கு எவ்வளவு போலீசார் தேவை என்பது குறித்து கணக்கெடுத்து வருகிறோம். தேவைப்பட்டால் கூடுதல் போலீசாரை வரவழைப்போம்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதுடன் உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருப்பவர்களை அதனை போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றார்.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications