127 இந்திய மீனவர்கள் மீதான வழக்குகளை தள்ளுபடி செய்த பாக். அரசு
இஸ்லாமாபாத்: 127 இந்திய மீனவர்கள் மீதான வழக்குகளை சிந்து மாகாண உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதாக பாகிஸ்தான் அதிகாரிகள் அந்நாட்டு உச்ச நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளனர். இதனால் அவர்கள் அனைவரும் விடுதலையாகக்கூடும்.
தலைமை நீதிபதி இப்திகார் சௌத்ரி தலைமையிலான பெஞ்ச் உத்தரவின்பேரில் இந்திய மீனவர்கள் மீதான 13 வழக்குகளை தள்ளுபடி செய்துள்ளதாக சிந்து உயர் நீதிமன்றக் குழு தணிக்கை நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளது.
இந்தியர்களுக்கு எதிரான வழக்குகள் குறித்து விரைவில் விசாரணை முடிக்குமாறு தணிக்கை நீதிமன்றம் உயர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது. இந்திய மீனவர்கள் கைது மற்றும் சிறைபிடிப்பை எதிர்த்து பாகிஸ்தான் மற்றும் இந்திய மீனவர்கள் தணிக்கை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் இந்திய மற்றும் பாகிஸ்தான் மீனவர்கள் எல்லை தாண்டுவதற்காக கைது செய்யப்படுவது வழக்கமான ஒன்றாகிவிட்டது. நீதிமன்றம் குறிப்பிட்டுள்ள தண்டனை காலம் முடிந்தும் பல மீனவர்கள் சிறையில் இருக்கின்றனர்.
அன்மையில் 12 இந்தியர்களை பாகிஸ்தான் விடுவித்தது. அதில் 11 பேர் மீனவர்கள். அவர்கள் தங்கள் தண்டனைக் காலம் முடிந்தும் கூடுதலாக 3 ஆண்டுகள் கராச்சி சிறையில் வைக்கப்பட்டிருந்தனர்.
2 பாகிஸ்தான் என்ஜிஓ-கள் அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் இந்திய மீனவர்களை விடுவிக்குமாறு மனு தாக்கல் செய்ததையடுத்து கடந்த ஆண்டு 442 இந்திய மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications