127 இந்திய மீனவர்கள் மீதான வழக்குகளை தள்ளுபடி செய்த பாக். அரசு
இஸ்லாமாபாத்: 127 இந்திய மீனவர்கள் மீதான வழக்குகளை சிந்து மாகாண உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதாக பாகிஸ்தான் அதிகாரிகள் அந்நாட்டு உச்ச நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளனர். இதனால் அவர்கள் அனைவரும் விடுதலையாகக்கூடும்.
தலைமை நீதிபதி இப்திகார் சௌத்ரி தலைமையிலான பெஞ்ச் உத்தரவின்பேரில் இந்திய மீனவர்கள் மீதான 13 வழக்குகளை தள்ளுபடி செய்துள்ளதாக சிந்து உயர் நீதிமன்றக் குழு தணிக்கை நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளது.
இந்தியர்களுக்கு எதிரான வழக்குகள் குறித்து விரைவில் விசாரணை முடிக்குமாறு தணிக்கை நீதிமன்றம் உயர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது. இந்திய மீனவர்கள் கைது மற்றும் சிறைபிடிப்பை எதிர்த்து பாகிஸ்தான் மற்றும் இந்திய மீனவர்கள் தணிக்கை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் இந்திய மற்றும் பாகிஸ்தான் மீனவர்கள் எல்லை தாண்டுவதற்காக கைது செய்யப்படுவது வழக்கமான ஒன்றாகிவிட்டது. நீதிமன்றம் குறிப்பிட்டுள்ள தண்டனை காலம் முடிந்தும் பல மீனவர்கள் சிறையில் இருக்கின்றனர்.
அன்மையில் 12 இந்தியர்களை பாகிஸ்தான் விடுவித்தது. அதில் 11 பேர் மீனவர்கள். அவர்கள் தங்கள் தண்டனைக் காலம் முடிந்தும் கூடுதலாக 3 ஆண்டுகள் கராச்சி சிறையில் வைக்கப்பட்டிருந்தனர்.
2 பாகிஸ்தான் என்ஜிஓ-கள் அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் இந்திய மீனவர்களை விடுவிக்குமாறு மனு தாக்கல் செய்ததையடுத்து கடந்த ஆண்டு 442 இந்திய மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications