எந்தக் கட்டத்திலும் அதிமுகவுடன் பேசியதில்லை-பாமக
சென்னை: அதிமுகவுடன் கூட்டணி தொடர்பாக எந்தக் கட்டத்திலும் பேசவில்லை என்று கூறியுள்ளார் பாமக தலைவர் ஜி.கே.மணி.
தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி மாறுவதை பொழுதுபோக்காக கொண்டிருக்கும் கட்சிகளில் ஒன்று பாமக. இக்கட்சி தற்போது திமுக கூட்டணியில் மீணடும் இணைந்து முதல் ஆளாக 31 தொகுதிகளை கேட்டு வாங்கி விட்டது.
இப்போது வசனம் வசனமாக பேச ஆரம்பித்திருக்கிறது அக்கட்சி. தேர்தலுக்கு முன்பு வரை 50 தொகுதிகளை யார் கொடுத்தாலும் அவர்களுடன் சேருவோம் என்று பச்சையாகவே பேசினார் டாக்டர் ராமதாஸ். பின்னர் திமுக அணியில் இணைந்த போது இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, கூட்டணிக்கு முன்பு அப்படிப் பேசுவது வழக்கம்தானே என்று வித்தியாசமான விளக்கம் தந்தார்.
அதிமுகவுடன் சேருவது குறித்து பாமக சார்பில் பேசப்பட்டு வந்ததாகவும் செய்திகள் வெளியாகின. தற்போது அதையும் மறுத்துள்ளது பாமக. இதுகுறித்து அக்கட்சித் தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வரும் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான தொகுதிகளை பங்கீடு செய்வதில் பா.ம.க.-தி.மு.க இடையே சுமுகமான உடன்பாடு ஏற்பட்டிருக்கிறது. ஒரே சந்திப்பில் இந்த உடன்பாடு எட்டப்பட்டிருக்கிறது.
இந்த உடன்பாடு கையெழுத்தான நாளுக்கு முன்தினமோ, எந்த ஒரு கட்டத்திலோ பா.ம.க. தலைவர்களும், அ.தி.மு.க. தலைவர்களும் சந்தித்து தொகுதி பங்கீடு குறித்து பேச்சு நடத்தவில்லை என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications