மனித உரிமை ஆணையத் தலைவர் பதவியை கேஜிபி ராஜினாமா செய்ய வர்மா வலியுறுத்தல்
டெல்லி: முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணனின் உறவினர்களிடம் கருப்பு பணம் இருப்பதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. எனவே, இதற்கு பொறுப்பேற்று அவர் மனித உரிமை ஆணையத்தின் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும், இல்லையெனில் குடியரசுத் தலைவர் அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே. எஸ். வர்மா தெரிவித்துள்ளார்.
இது குறித்து வர்மா கூறியதாவது,
பாலகிருஷ்ணன் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அவரது உறவினர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பொய் என்றால் அவற்றை நிரூபிப்பது பாலகிருஷ்ணனுடைய பொறுப்பு. மௌனம் காப்பது பதிலாகாது.
அவர் பதவி விலகாவிடில் குடியரசுத் தலைவர் இந்த விஷயத்தில் தலையிட்டு அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும். அவர் தன் மீது எந்த குற்றமும் இல்லை என்று நிரூபிக்காவிட்டால், அவரை பதவியில் இருந்து நீக்கும் பணியை துவங்க வேண்டும்.
அவர் தொடர்ந்து மனித உரிமை ஆணையத்தின் தலைவராக இருந்தால் அவரது வார்த்தையில் நம்பிக்கையின்றி போய்விடும். ஊழல் தான் மிகப் பெரிய அதிர்ச்சியூட்டும் மனித உரிமை மீறலாகும்.
அத்தகைய ஊழல் குற்றம் சுமத்தப்பட்டுள்ளவரே மனித உரிமை ஆணையத்தின் தலைவராக இருப்பது நீதிக்கு புறம்பானது ஆகும் என்றார்.
இந்த விஷயத்தில் பாலகிருஷ்ணன் பற்றி என்னால் எதுவும் கூற இயலாது. ஆனால் அவரது 2 மருமகன்களும், சகோதரரும் கருப்பு பணம் வைத்திருப்பதை கண்டுபிடித்துள்ளோம்.
நீதிபதி பாலகிருஷ்ணனின் 2 மருமகன்கள் வழக்கறிஞர் பிவி ஸ்ரீநிஜன், வழக்கறிஞர் பென்னி மற்றும் அவரது சகோதரர் அரசு வழக்குரைஞர் பாஸ்கரன் ஆகியோர் கருப்பு பணம் வைத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று வருமான வரித்துறை விசாரணைப் பிரிவு டைரக்டர் ஜெனரல் ஈ.டி லூகோஸ் தெரிவித்துள்ளார்.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications