மனித உரிமை ஆணையத் தலைவர் பதவியை கேஜிபி ராஜினாமா செய்ய வர்மா வலியுறுத்தல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணனின் உறவினர்களிடம் கருப்பு பணம் இருப்பதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. எனவே, இதற்கு பொறுப்பேற்று அவர் மனித உரிமை ஆணையத்தின் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும், இல்லையெனில் குடியரசுத் தலைவர் அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே. எஸ். வர்மா தெரிவித்துள்ளார்.

இது குறித்து வர்மா கூறியதாவது,

பாலகிருஷ்ணன் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அவரது உறவினர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பொய் என்றால் அவற்றை நிரூபிப்பது பாலகிருஷ்ணனுடைய பொறுப்பு. மௌனம் காப்பது பதிலாகாது.

அவர் பதவி விலகாவிடில் குடியரசுத் தலைவர் இந்த விஷயத்தில் தலையிட்டு அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும். அவர் தன் மீது எந்த குற்றமும் இல்லை என்று நிரூபிக்காவிட்டால், அவரை பதவியில் இருந்து நீக்கும் பணியை துவங்க வேண்டும்.

அவர் தொடர்ந்து மனித உரிமை ஆணையத்தின் தலைவராக இருந்தால் அவரது வார்த்தையில் நம்பிக்கையின்றி போய்விடும். ஊழல் தான் மிகப் பெரிய அதிர்ச்சியூட்டும் மனித உரிமை மீறலாகும்.

அத்தகைய ஊழல் குற்றம் சுமத்தப்பட்டுள்ளவரே மனித உரிமை ஆணையத்தின் தலைவராக இருப்பது நீதிக்கு புறம்பானது ஆகும் என்றார்.

இந்த விஷயத்தில் பாலகிருஷ்ணன் பற்றி என்னால் எதுவும் கூற இயலாது. ஆனால் அவரது 2 மருமகன்களும், சகோதரரும் கருப்பு பணம் வைத்திருப்பதை கண்டுபிடித்துள்ளோம்.

நீதிபதி பாலகிருஷ்ணனின் 2 மருமகன்கள் வழக்கறிஞர் பிவி ஸ்ரீநிஜன், வழக்கறிஞர் பென்னி மற்றும் அவரது சகோதரர் அரசு வழக்குரைஞர் பாஸ்கரன் ஆகியோர் கருப்பு பணம் வைத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று வருமான வரித்துறை விசாரணைப் பிரிவு டைரக்டர் ஜெனரல் ஈ.டி லூகோஸ் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+