மனித உரிமை ஆணையத் தலைவர் பதவியை கேஜிபி ராஜினாமா செய்ய வர்மா வலியுறுத்தல்
டெல்லி: முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணனின் உறவினர்களிடம் கருப்பு பணம் இருப்பதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. எனவே, இதற்கு பொறுப்பேற்று அவர் மனித உரிமை ஆணையத்தின் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும், இல்லையெனில் குடியரசுத் தலைவர் அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே. எஸ். வர்மா தெரிவித்துள்ளார்.
இது குறித்து வர்மா கூறியதாவது,
பாலகிருஷ்ணன் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அவரது உறவினர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பொய் என்றால் அவற்றை நிரூபிப்பது பாலகிருஷ்ணனுடைய பொறுப்பு. மௌனம் காப்பது பதிலாகாது.
அவர் பதவி விலகாவிடில் குடியரசுத் தலைவர் இந்த விஷயத்தில் தலையிட்டு அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும். அவர் தன் மீது எந்த குற்றமும் இல்லை என்று நிரூபிக்காவிட்டால், அவரை பதவியில் இருந்து நீக்கும் பணியை துவங்க வேண்டும்.
அவர் தொடர்ந்து மனித உரிமை ஆணையத்தின் தலைவராக இருந்தால் அவரது வார்த்தையில் நம்பிக்கையின்றி போய்விடும். ஊழல் தான் மிகப் பெரிய அதிர்ச்சியூட்டும் மனித உரிமை மீறலாகும்.
அத்தகைய ஊழல் குற்றம் சுமத்தப்பட்டுள்ளவரே மனித உரிமை ஆணையத்தின் தலைவராக இருப்பது நீதிக்கு புறம்பானது ஆகும் என்றார்.
இந்த விஷயத்தில் பாலகிருஷ்ணன் பற்றி என்னால் எதுவும் கூற இயலாது. ஆனால் அவரது 2 மருமகன்களும், சகோதரரும் கருப்பு பணம் வைத்திருப்பதை கண்டுபிடித்துள்ளோம்.
நீதிபதி பாலகிருஷ்ணனின் 2 மருமகன்கள் வழக்கறிஞர் பிவி ஸ்ரீநிஜன், வழக்கறிஞர் பென்னி மற்றும் அவரது சகோதரர் அரசு வழக்குரைஞர் பாஸ்கரன் ஆகியோர் கருப்பு பணம் வைத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று வருமான வரித்துறை விசாரணைப் பிரிவு டைரக்டர் ஜெனரல் ஈ.டி லூகோஸ் தெரிவித்துள்ளார்.
-
பாடகி சுஜாதா மோகனுக்கு இருக்கும் பிரச்சனை.. யாராவது உதவுங்க! ஏ.ஆர் ரகுமான் சகோதரி உருக்கமான வேண்டுகோள் -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்.. விலகிய கையோடு அதிமுக கூட்டணியில் ஐக்கியம்.. யாருனு பாருங்க -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
தங்கத்தை அடகு வைத்து.. அந்த பணத்தில் புதிதாக தங்கம் வாங்கலாமா? மிக ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
Thaai Kizhavi OTT: சொன்ன தேதிக்கு முன்பு ஓடிடியில் வந்த தாய் கிழவி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு! ட்விஸ்ட் -
"FCRA சட்டத்திருத்தம் குரூரமானது.. கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களை முடக்க முயற்சி" - திமுக எம்.பி வில்சன் -
திருப்பூரில் அடியோடு மாறப்போகும் பின்னலாடை நிறுவனங்கள்.. ஏற்றுமதியாளர்கள் எடுத்த அதிரடி முடிவு -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள்












Click it and Unblock the Notifications