பட்ஜெட் வீடுகள்: ரூ 3000 கோடி முதலீடு செய்யும் டாடா!

ஏற்கெனவே இதுபோன்ற 5 திட்டங்களை சென்னை உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களில் செயல்படுத்தும் பணியில் உள்ளது டாடா. இப்போது இரண்டாம் கட்ட முக்கிய நகரங்களில் மேலும் 8 பட்ஜெட் வீடுகள் திட்டத்தை செயல்படுத்தவிருக்கிறது.
இந்த வீடுகள் ஒவ்வொன்றும் ரூ 5 லட்சம் முதல் 35 லட்சம் வரையிலான விலையில் இருக்கும். இந்தத் திட்டத்துக்கென்றே ஸ்மார்ட் வேல்யூ ஹோம்ஸ் என்ற புதிய துணை நிறுவனத்தையும் தொடங்கியுள்ளது டாடா.
"சொந்த வீடு என்ற கனவில் உள்ள அனைவருக்கும் வீடு கிடைக்கச் செய்யும் திட்டம்தான் டாடாவின் பட்ஜெட் வீடுகள் திட்டம். இதற்காக உடனடியாக ரூ 2500 கோடி முதல் 3000 கோடி வரை முதலீடு செய்யவிருக்கிறோம்" என்கிறார் டாடா ஹவுஸிங் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ப்ரோடின் பானர்ஜி.
இந்த ஸ்மார்ட் வேல்யூ நிறுவனத்தின் சார்பில் இப்போது மும்பை, புனே மற்றும் சென்னையில் தலா ஒரு வீட்டுவசதித் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. 10 முதல் 12 மில்லியன் சதுர அடி பரப்பளவில் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.
அடுத்த அகமதாபாத் மற்றும் பெங்களூருவில் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. மும்பையில் இரண்டாவது புராஜெக்ட் கொண்டுவரும் திட்டமும் உள்ளதாம். 2011-2012-ல் இந்த வீடுகள் விற்பனைக்கு வரும்.
இதற்கு அடுத்து லூதியானா, ஜலந்தர் மற்றும் சண்டிகரில் குறைந்த விலை வீடுகள் கட்டி விற்கப்படும் என இந்நிறுவனம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications