13 பேய் நம்பர்... பேயை விரட்டும் நாளுக்கான நம்பர்! - விஜயகாந்த்

தெய்வத்தோடும் மக்களோடும்தான் கூட்டணி என்று கூறி, தன்னை தனித்தன்மை மிக்கவராகக் காட்டி, மக்களின் வாக்குகளை கடந்த தேர்தல்களில் கவர்ந்து, தனி வாக்கு வங்கியை உருவாக்கிக் கொண்டு விட்ட விஜயகாந்த், வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து பலே பல்டி அடித்துள்ளார்.
இது தொடர்பாக தேமுதிக நிர்வாகிகள் பண்ருட்டி ராமச்சந்திரன், சுதீஷ், சுந்தர்ராஜன் ஆகியோர் அதிமுக தலைமைக் கழகத்திற்கு சென்று ஆலோசனை நடத்தினர். ஆனாலும் சீட் விஷயத்தில் விஜயகாந்தின் பேராசைக்கு தீனி போட முடியாது என அமைதி காக்கிறார் அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா.
இந்த நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், இன்று புதன்கிழமை கட்சி அலுவலகத்துக்கு வந்தார். அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.
கேள்வி: கூட்டணி தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை எப்போது சந்திப்பீர்கள்?
பதில்: இப்போது சொல்ல முடியாது.
கேள்வி: அதிமுக கூட்டணியில் உங்கள் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படும்?
பதில்: அதையும் இப்போது சொல்ல முடியாது. இன்னும் இரண்டு நாள் பொறுத்திருங்கள். உங்களைத்தான் முதலில் சந்தித்து அதைப் பற்றி தெரிவிப்பேன், என்றார்.
கேள்வி: தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 13 - ரிசல்டோ மே 13 என்று அறிவிக்கப்பட்டிருக்கிறதே?
பதில்: 13 என்பது பேய் நம்பர். தமிழ் நாட்டை பிடித்திருக்கும் ஊழல் என்ற பேயையும், விலைவாசி என்ற பேயையும் அகற்றுவதற்கு இந்த நம்பர் உதவும், என்றார்.












Click it and Unblock the Notifications