திமுக கூட்டணியில் கொங்கு நாடு முன்னேற்ற கழகம் கோரும் தொகுதிகள்
சென்னை: வரும் சட்டமன்றத் தேர்தலில் கொங்குநாடு முன்னேற்ற கழகம் தான் போட்டியிட விரும்பும் 15 தொகுதிகளின் பட்டியலை திமுகவிடம் கொடுக்கவுள்ளது.
திமுக கூட்டணியில் கொங்குநாடு முன்னேற்ற கழகத்துக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பல ஆணடுகளாக கொங்கு மண்டலத்தில் அதிமுகவிடம் மரண அடி வாங்கி வருகிறது திமுக. இந்தப் பகுதியில் மக்களவைத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல்களில் திமுகவுக்கு பெரும் தோல்வியே ஏற்பட்டு வருகிறது.
இதையடுத்து முதன்முதலாக கொங்கு முன்னேற்றக் கழகத்துடன் திமுக கூட்டணி அமைத்துள்ளது. இந்த நிலையில் இந்தக் கட்சி போட்டியிட விரும்பும் 15 தொகுதிகளை அடையாளம் கண்டுள்ளது. அதை திமுகவிடம் அந்தக் கட்சி தரவுள்ளது. இதில் 7 தொகுதிகளை திமுக அந்தக் கட்சிக்கு வழங்கும்.
இது குறித்து கொங்கு நாடு முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் அளித்துள்ள பேட்டியி்ல்,
கொங்கு மண்டலத்தின் வளர்ச்சியை மையமாக வைத்தே திமுகவுடன் கூட்டணி முடிவு செய்யப்பட்டுள்ளது. அதுவே எங்கள் நோக்கமாகும். தேர்தலில் திமுக கூட்டணியின் வெற்றிக்கு முழுமையாக பாடுபடுவோம். கொ.மு.க. போட்டியிடும் 7 தொகுதிகளை தேர்வு செய்வதற்கு 15 தொகுதிகளை தேர்வு செய்து ஓரிரு நாட்களில் திமுக குழுவிடம் கொடுக்கப்படும் என்றார்.
அந்தக் கட்சி பொள்ளாச்சி, திருப்பூர் வடக்கு, அந்நியூர், காங்கேயம், தொண்டமுத்தூர், மடத்துகுளம், அரவக்குறிச்சி, உடுமலைப்பேட்டை, பல்லடம், ஈரோடு மேற்கு, கோபி உள்ளிட்ட தொகுதிகள் கேட்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications