திமுகவின் அமைச்சர் பதவி விலகல் முடிவை உலகமே வரவேற்கிறது: கி.வீரமணி

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
வரலாற்றில் இடம்பெறும் முக்கிய அரசியல் முடிவை எடுத்த திமுக, அதன் தலைவருக்கு நமது பாராட்டும் மகிழ்ச்சியும்.
தமிழ் மானம், தன்மானம் இவற்றை எல்லாம் காப்பதுதான் திமுகவின் அடிப்படை லட்சியம் - குறிக்கோள் என்பதை பறைசாற்றிய இந்த முடிவு உலகத் தமிழர்கள் முதல் உள்ளூர்த் தமிழர்கள் வரை அனைவரும் வரவேற்கும் முடிவாக அமைந்துவிட்டது.
இனி, தி.மு.க. கறந்தபால் முலை, புகா; கடைந்த வெண்ணெய் மோர் புகா என்ற சிந்தனைக்குரிய சித்தர்கள் வாக்கினை எண்ணிப் பார்த்து, பதவிகளை விட, கொள்கைகளும் அவற்றைப் பரப்பிடும் இயக்கமுமே முக்கியம் என்பதை கருத்தில் கொண்டு நடந்தால் அனைவருக்கும் நல்லது.
கட்சித் தோழர்கள், இனஉணர்வாளர்கள், லட்சிய வீரர்கள் மகிழ்ச்சியை நிரந்தரமாகக்கும் வகையில் திமுகவின் தேர்தல் பணித் திட்டம் அமைய வேண்டும் என்பதே நமது அடக்கமான ஆசையாகும் என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications