கிராபிக்ஸ் டிசைனர் யாமினியை மணந்தார் வருண் காந்தி

காசியில், கங்கைக் கரையோரமாக அமைந்துள்ள, காஞ்சி சங்கர மடத்திற்குச் சொந்தமான காமகோடி கோவிலில், ஜெயேந்திரர் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.
30 வயதான வருண் காந்தி, பட்டு குர்தா, வேட்டி, ஆரஞ்சு நிற அங்கவஸ்திரம் அணிந்து மணக்கோலத்தில் காணப்பட்டார். வேத மந்திரங்கள் முழங்க பாரம்பரிய முறைப்படி நடந்த திருமணத்தின்போது யாமினிக்கு அவர் கழுத்தில் தாலி கட்டினார்.
மணமகள் யாமினி ராய், மறைந்த பிரதமர் இந்திரா காந்தி தனது மருமகள் மேனகா காந்திக்கு அன்பளிப்பாக கொடுத்த பிங்க் நிற பட்டுச் சேலையை அணிந்து வந்திருந்தார்.
சோனியா குடும்பத்திலிருந்து யாரும் வரவில்லை
இன்று காலை நடந்த இந்த திருமணத்தில் குறிப்பிட்ட சிலர் மட்டும் கலந்து கொண்டனர். இருப்பினும் சோனியா காந்தி குடும்பத்திலிருந்து ஒருவரும் வரவில்லை.
திருமணத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயேந்திரர், திருமணம் நல்லபடியாக நடந்தது. மணமக்களை ஆசிர்வதித்தேன் என்றார்.
மார்ச் 8ம் தேதி டெல்லியில் வரவேற்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இருப்பினும் மேனகா காந்தியின் தாயார் அம்தேஸ்வர் ஆனந்த் மரணமடைந்துள்ளதால் இது ரத்து செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications