14ம் தேதி தமிழகம் வருகிறார் தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி, வருகிற 14ம் தேதி சென்னை வருகிறார். தேர்தல் தொடர்பான பணிகள் குறித்து அவர் ஆலோசனை மேற்கொள்கிறார்.
தமிழகத்தில், ஏப்ரல் 13ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதே நாளில் புதுச்சேரி, கேரளாவிலும் தேர்தல் நடைபெறவுள்ளது.
இதற்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 19ம் தேதி தொடங்குகிறது. தேர்தல் ஏற்பாடுளும் முழு வீச்சில் நடந்து வருகின்றன. இந்தப் பின்னணியில் தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி வருகிற 14ம் தேதி சென்னை வருகிறார். 2 நாள் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் அவர் பயணம் மேற்கொண்டு ஆய்வு நடத்துகிறார்.
தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் உள்ளிட்ட அதிகாரிகளுடனும் அவர் ஆலோசனை நடத்துகிறார்.












Click it and Unblock the Notifications