தமிழகத்தில் விடுதலைப் புலிகள் யாரும் இல்லை-லத்திகா சரண்
சென்னை: தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் எதுவும் இயங்கவில்லை. இதுதொடர்பாக இலங்கை பிரதமர் ஜெயரத்னே கூறிய தகவல் தவறானது என்று டிஜிபி லத்திகா சரண் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம்கள் இருப்பதாகவும், நெடியவன், விநாயகம், ருத்ரகுமாரன் ஆகியோர் இந்த முகாம்களை அமைத்திருப்பதாகவும் இலங்கை பிரதமர் ஜெயரத்னே கூறியிரு்நதார். இதை உடனடியாக டிஜிபி லத்திகா சரண் மறுத்துள்ளர்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழக, கேரள எல்லையில் விடுதலைப் புலிகளுக்கான பயிற்சி முகாம்கள் ரகசியமாக இயங்கி வருகின்றன என இலங்கை நாடாளுமன்றத்தில் அந் நாட்டு பிரதமர் டி.எம்.ஜெயரத்னே கூறியதாக நாளேடுகளில் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த தகவல்கள் உண்மைக்கு மாறானது, அடிப்படை இல்லாதது.
விடுதலைப் புலிகள் குறித்து தமிழக போலீஸின் புலனாய்வுத் துறை விழிப்புடன் இருந்து கண்காணித்து வருகிறது.கடலோரப் பாதுகாப்புக் குழுவுடன் இணைந்து தமிழகத்தில் உள்ள கடலோரப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த வி. ருத்ரகுமாரன், நார்வேயைச் சேர்ந்த நெடியவன், விநாயகம் ஆகியோரும் இத்தகவல்களை மறுத்துள்ளனர். இலங்கையில் உள்நாட்டுப் போரை நடத்தவும், தமிழக தலைவர்களைக் கொல்லவும் இங்கு விடுதலைப் புலிகள் பயிற்சி முகாம்களை நடத்தி வருவதாகக் கூறப்பட்டுள்ள தகவல்கள் எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லாதது.
மேலும், சென்னையில் புத்த மடம் தாக்கப்பட்டது விடுதலைப் புலிகளால் அல்ல, இந்த தாக்குதல் தொடர்பாக இலங்கைத் தமிழர் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications