லிபியாவில் அல் ஜசீரா டிவி நிருபர் சுட்டுக் கொலை
Subscribe to Oneindia Tamil
பெங்காஸி: லிபியாவில், கடாபி ஆதரவு ராணுவத்தினரால், அல் ஜசீரா டிவி நிருபர் அலி ஹஸன் அல் ஜாபர் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
பெங்காஸியில், அவரும், பிற செய்தியாளர்களும் ஒரு வாகனத்தில் வந்தபோது, காருக்குப் பி்ன்னாலிருந்து சிலர் சரமாரியாக சுட்டனர். இதில் ஜாபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இன்னொருவர் படுகாயமடைந்தார்.
ஜாபரைக் கொன்றவர்கள் அதிபர் கடாபி ஆதரவு ராணுவத்தினர் என்று கூறப்படுகிறது.
அல் ஜசீரா டிவியில் லிபிய புரட்சி குறித்த செய்திகள் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகின்றன. மேலும் கடாபி படையினர் நிகழ்த்தி வரும் படுகொலைகளையும் அது செய்தியாக்கி வெளியிட்டு வருகிறது. இதனால் கடாபி அரசு அல் ஜசீராவை ஏற்கனவே லிபியாவில் தடை செய்துள்ளது. இந்த நிலையில் அல் ஜசீரா டிவி நிருபர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications