சென்னையில் தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி-கட்சிகளுடன் ஆலோசனை
சென்னை: தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி சென்னை வந்துள்ளார். அவரும், மற்ற இரு தேர்தல் ஆணையர்களும் இன்று அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்துகின்றனர்.
தமிழக சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் 13ம் தேதி நடைபெறுகிறது. வேட்பு மனு தாக்கல் வருகிற 19ம் தேதி தொடங்குகிறது.
இதையடுத்து தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்யவும், அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தவும் குரேஷி தலைமையில் தேர்தல் ஆணையர்கள் சென்னை வந்துள்ளனர்.
இன்று அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்து அவர்களிடம் தேர்தல் நடத்தை விதிகளைக் கடைப்பிடிப்பது குறித்து குரேஷி ஆலோசனை நடத்துகிறார். அதேபோல தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார், காவல்துறை அதிகாரிகள், தேர்தல் அதிகாரிகளுடனும் குரேஷி ஆலோசனை நடத்துகிறார்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் இந்த முறை கடுமையாக்கப்பட்டுள்ளன. பல்வேறு கட்டுப்பாடுகளையும் தேர்தல் ஆணையம் விதித்துள்ளது. பணப் புழக்கத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக அது எடுத்து வரும் நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. கடந்த சில நாட்களில் மட்டும் ரூ. 15 கோடி அளவுக்குப் பணம், நகைககள், சேலைகள் சிக்கியுள்ளன.
இதுகுறித்து அரசியல் கட்சிகளிடம் விளக்கு கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ளுமாறு குரேஷி வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications