திருச்சியில் வாக்காளர்களுக்கு நள்ளிரவில் வேட்டி, சேலை-அதிகாரிகள் பறிமுதல்
திருச்சி: திருச்சியில், வாக்காளர்களுக்கு நள்ளிரவில் வேட்டி, சேலை வழங்கப்பட்டது. இதையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் விரைந்து சென்று வீடு வீடாக சோதனை நடத்தி வேட்டி, சேலையைப் பறிமுதல் செய்தனர்.
திருச்சி மேற்கு தொகுதிக்குட்பட்ட பகுதியில், நேற்று நள்ளிரவில் திடீரென சிலர் வந்து வீடு வீடாக வேட்டி, சேலையை வழங்கினர். இதுகுறித்து வருவாய்த்துறைக்குப் புகார் போனது. கிட்டத்தட்ட 2000 வீடுகளுக்கு வேட்டி, சேலை வழங்கப்பட்டதாக புகார் கூறியது.
இதையடுத்து விரைந்து வந்த வருவாய்த்துறையினர், வீடு வீடாக சோதனை நடத்தி வேட்டி, சேலையை பறிமுதல் செய்தனர்.
யார் வேட்டி, சேலை கொடுத்தது என்பதே தெரியவில்லை என்று வாக்காளர்கள் தெரிவித்தனர். இதனால் எந்தக் கட்சி மீது வழக்கு தொடருவது என்று தெரியாமல் அதிகாரிகள் குழப்பமடைந்துள்ளனர்.
இதுதொடர்பாக விசாரணை நடத்தி முறையாக வழக்குப் பதிவு செய்ய தற்போது அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications