தமிழகத்திலேயே மிகப் பெரிய தொகுதியில் வி.சிறுத்தைகள் போட்டி-தொகுதிப் பட்டியல்
சென்னை: தமிழகத்திலேயே மிகப் பெரிய தொகுதி என்ற பெயரைப் பெற்றுள்ள சோழிங்கநல்லூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடுகிறது. இக்கட்சிக்கான பத்து தொகுதிகளும் நேற்று இரவு அறிவிக்கப்பட்டன.
அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் கருணாநிதியை இரவு சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் இதுதொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
இதையடுத்து சிறுத்தைகள் போட்டியிடும் தொகுதிகளின் விவரம் தெரிய வந்தது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 2 பொதுத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மற்றவை தனித் தொகுதிகளாகும்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடவுள்ள தொகுதிகள் விவரம்:
- அரக்கோணம் (தனி)
- கள்ளக்குறிச்சி (தனி)
- சீர்காழி (தனி)
- திட்டக்குடி (தனி)
- ஊத்தங்கரை (தனி)
- அரூர் (தனி)
- காட்டுமன்னார்கோயில் (தனி)
- செய்யூர் (தனி)
- சோழிங்கநல்லூர்
- உளுந்தூர்பேட்டை
தொகுதி மறு சீரமைப்பின் கீழ் புதிதாக உருவாக்கப்பட்ட தொகுதி சோழிங்கநல்லூர். தற்போது தமிழகத்திலேயே மிகப் பெரிய தொகுதி இதுதான். இந்தப் பெருமையைப் பெற்றுள்ள தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.