ராசாவுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா
சென்னை: 2ஜி ஊழல் தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் ஆ. ராசாவுக்கு முழுமையான பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
ஆ. ராசாவின் நெருங்கிய நண்பரும், அவருடைய சொத்துக்களின் பாதுகாவலருமான சாதிக் பாட்சா நேற்று சந்தேகத்துக்கு இடமான முறையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதேபோன்று கடந்த சில வருடங்களுக்கு முன் மு.க.ஸ்டாலினின் நெருங்கிய நண்பரும், சொத்துக்களின் பாதுகாவலருமான அண்ணா நகர் ரமேஷ் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டது அனைவரும் அறிந்த செய்தி ஆகும்.
அந்த சமயத்தில் ரமேஷ் எங்கே உண்மையைச் சொல்லி, அரசாங்க சாட்சியாக மாறிவிடுவாரோ என்ற பேச்சும் இருந்தது. தற்போது சாதிக் பாட்சா தற்கொலை செய்து கொண்டுள்ளார். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக முழுமையான உண்மையையும் வெளியே கொண்டு வர வேண்டும் என்று மத்தியப் புலனாய்வுத் துறையும், உச்ச நீதிமன்றமும் நினைத்தால், விசாரணை முடியும் வரை அனைத்து சாட்சிகளையும் மத்தியப் புலனாய்வுத் துறை கட்டுப்பாட்டிலோ, நீதிமன்றக் காவலிலோ வைக்க வேண்டும்.
மேலும், சிறையில் உள்ள ஆ. ராசாவுக்கு முழுமையான பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். இல்லையனில் சாதிக் பாட்சாவின் நிலைமை தான் ராசாவுக்கும். மத்தியப் புலனாய்வுத் துறை கருணாநிதி குடும்ப உறுப்பினர்களை நெருங்கக் கூடாது என்பது தான் திமுகவின் நோக்கம்.
தற்போது நடந்துள்ளது கொலையா? அல்லது கட்டாய தற்கொலையா? என்று சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்.
அவ்வாறு விசாரிக்க மத்தியப் புலனாய்வுத் துறை தயங்கினால், உச்ச நீதிமன்றமும், நாடாளுமன்றக் கூட்டுக் குழுவும் தலையிட்டு தேவையான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு












Click it and Unblock the Notifications