தேர்தல்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு
திருச்சி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியிடப்படுகிறது.
வரும் சட்டசபை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதிமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிடுகின்றது. துவக்கத்தில்
விருப்ப தொகுதி பெறுவதில் அதிமுக-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தேமுதிக போன்ற கட்சிகள் கூட்டணி அமைத்து 3-வது அணி அமைக்கும் வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகின.
இதற்கிடையே அதிமுக- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடையே தொகுதிப் பங்கீடு சுமூகமான முறையில் முடிந்து 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது.
ஒதுக்கப்பட்டுள்ள 2 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்பதை உறுதி செய்ய நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து இன்று மாலை வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகின்றது.












Click it and Unblock the Notifications