சட்டசபை தேர்தல்: இன்று முதல் தென்காசியில் சரத்குமார் பிரசாரம்
தென்காசி: தென்காசி சட்டசபை தொகுதியில் அதிமுக கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் இன்று (21-ம் தேதி) தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து தனது தேர்தல் பிரசாரத்தை துவங்குகிறார்.
அதிமுக கூட்டணி சார்பில் தென்காசி சட்டசபை தொகுதியி்ல் போட்டியிடும் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் இன்று (21-ம் தேதி) காலை நெல்லை வந்து கூட்டணி கட்சி மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார். காலை 11 மணிக்கு பாவூர்சத்திரம் வரும் சரத்குமாருக்கு சமக மற்று்ம் அதிமுக கூட்டணி கட்சி சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் பாவூர்சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவி்த்து பிரசாரத்தை துவங்குகிறார்.
இதைத்தொடர்ந்து சுரண்டையில் உள்ள அண்ணாத்துரை சிலை, சுந்தரபாண்டியபுரத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவிக்கிறார். கீழப்புலியூர் முத்துராமலிங்கத் தேவர் சிலை, மேலகரம், நன்னகரத்தில் உள்ள அம்பேத்கார் சிலை, குற்றாலத்தில் உள்ள அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்து விட்டு தென்காசி சட்டசபை தொகுதியில் கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து தேர்தல் பிரச்சாரம் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.
நாளை (22-ம் தேதி) காலை 9 மணிக்கு திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயிலில் விசேஷ பூஜை செய்து வழிபடுகிறார். வரும் 23-ம் தேதி காலை தென்காசி இசக்கி மஹாலில் அதிமுக கூட்டணி கட்சியை சேர்நத செயல்வீரர்கள் கூட்டம் நடக்கிறது. இதில் கலந்து கொண்டு பேசுகிறார். ஏற்பாடுகளை அதிமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications