மரத்தில் ஏறி அதிமுக பிரமுகர் போராட்டம்-ஜெ வீடு அருகே நடந்த கூத்து
சென்னை: செஞ்சி தொகுதி அதிமுக வேட்பாளரை மாற்றக் கோரி அக்கட்சி பிரமுகர் ஒருவர் ஜெயலலிதா வீடு அருகே உள்ள மரத்தில் ஏறி கீழே குதிக்கப்போவதாக நூதன போராட்டம் நடத்தினார்.
நேற்று பிற்பகல் 2 மணி அளவில் போயஸ் கார்டனில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வீடு அருகே உள்ள பின்னி சந்திப்பில் பரபரப்பு ஏற்பட்டது. அதற்கு காரணம் அதிமுக பிரமுகர் ஒருவர் அங்குள்ள மரத்தில் ஏறிக் கொண்டு கீழே குதித்துவிடுவேன் என்று மிரட்டியது தான்.
இது குறித்து தகவல் அறிந்ததும் அங்கு காவலுக்கு இருந்த போலீசார் அந்த பிரமுகரை சமாதானம் செய்து கீழேஇறக்கினார்கள். பின்னர் அவர் தேனாம்பேட்டை போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.
விசாரணையில் அவர் கூறியதாவது,
என் பெயர் சேட்டு(34). நான் மேல்மலையனூர் அருகேயுள்ள கொடுங்குப்பத்தைச் சேர்ந்தவன். அப்பகுதி
அதிமுக கிளைக்கழக துணை செயலாளராக இருக்கிறேன்.
செஞ்சி தொகுதி அதிமுக வேட்பாளர் தமிழ்மொழி ராஜதத்தனை மாற்றக் கோரியும், இதை ஜெயலலிதாவின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்காகவும் தான் இப்படி நூதன போராட்டம் நடத்தினேன் என்றார்.
அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்படுவார் என்றும் உதவி கமிஷனர் ரெங்கராஜன் கூறினார்.
இதற்கிடையே நேற்று மாலை செஞ்சி தொகுதி அதிமுக கூட்டணிக் கட்சியான தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்பதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications