திருச்செங்கோடு தேமுதிக வேட்பாளர் சம்பத்குமார் வீட்டில் குண்டுவீச்சு
Subscribe to Oneindia Tamil
நாமக்கல்: திருச்செங்கோடு தொகுதி தேமுதிக வேட்பாளர் சம்பத்குமார் வீட்டின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்ட தேமுதிக செயலாளராக உள்ள சம்பத்குமார் வரும் சட்டசபை தேர்தலில் திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிடுவார் என அக்கட்சி தலைமை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நாமக்கலில் உள்ள சம்பத்குமார் வீட்டிற்கு வேன் ஒன்றில் சென்ற மர்ம நபர்கள், வீட்டிற்குள் பெட்ரோல் குண்டுகளை வீசிவி்ட்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர்.
தகவல் அறிந்த நாமக்கல் போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications