பழனி திமுக ஒன்றியச் செயலாளர் வீட்டில் ரூ. 13.64 லட்சம் பறிமுதல்

Subscribe to Oneindia Tamil

பழனி: பழனி திமுக ஒன்றிய செயலாளர் வீட்டில் இருந்து ரூ. 13.64 லட்சத்தை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி சட்டசபை தொகுதியில் திமுக சார்பில் அமைச்சர் ஐ. பெரியசாமியின் மகன் செந்தில் குமார் போட்டியிடுகின்றார்.

இதனால் அவரை எப்படியும் வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக திமுகவினர் பணம் பதுக்கி வைத்துள்ளனர் என்று தேர்தல் ஆணையத்தின் பறக்கும்படைக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து ஆர்.டி.ஓ. வேலுச்சாமி தலைமையிலான அதிகாரிகள், தட்டான்குளத்தில் உள்ள திமுக ஒன்றிய செயலாளர் மாரியப்பன் வீட்டில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது ரூ 13. லட்சத்து 64 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த மாரியப்பன் ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பணத்திற்கு உரிய சில ஆவணங்களை சமர்ப்பித்தார். ஆனால் அவைகள் போலியானவை என்பதால் மாரியப்பனை அதிகாரிகள் எச்சரிக்கை செய்து திருப்பி அனுப்பினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+