மனம் கவர்ந்தவருக்கெல்லாம் சீட் தருவதா: குமுறும் குமரி காங்கிரஸார்
கன்னியாகுமரி: முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவரின் மனம் கவர்ந்த பெண்மணிக்கு சீட் தந்திருப்பதற்கு கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸார் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 63 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதற்கான வேட்பாளர் தேர்வு இழுபறியாய் இருந்து வந்தது. ஒரு வழியாக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
இந்த பட்டியலில் இடம்பிடிக்க காங்கிரஸ் கட்சியினர் இடையே போட்டா போட்டி நடந்தது. இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவரின் மனம் பெண்மணி ஒருவர் குமரி மாவட்டத் தொகுதி ஒன்றுக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இது அப்பகுதி காங்கிரஸாரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கட்சிக்காக உழைத்தவர்கள் பலர் அங்கீகரிக்கப்படாமலேயே உள்ளனர். உழைப்புக்கு மரியாதை தராமல், 'மனம் கவர்ந்தவர்களுக்கு' சீட் வழங்குவது எந்த வகையில் நியாயம் என்று கேட்டு டெல்லியில் உள்ள சோனியா காந்திக்கு கடிதம் மேல் கடிதம் பறந்துள்ளதாம்.












Click it and Unblock the Notifications