52 நாள் லீவில் செல்ல லத்திகா சரணுக்கு அனுமதி
Subscribe to Oneindia Tamil
சென்னை: டிஜிபி பதவியிலிருந்து மாற்றப்பட்டுள்ள லத்திகா சரண் 52 நாட்கள் விடுப்பில் செல்ல உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
தமிழக டிஜிபி லத்திகா சரணை, சமீபத்தில் தேர்தல் ஆணையம் திடீரென இடமாற்றம் செய்தது. அவருக்குப் பதில் போலாநாத்தை புதிய டிஜிபியாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அதேபோல உளவுத்துறை கூடுதல் டிஜிபி ஜாபர் சேட்டை டெல்லிக்கு நேரில் அழைத்தும் விசாரணை நடத்தியது தேர்தல் ஆணையம்.
இதைத் தொடர்ந்து இருவரும் நீண்ட விடுப்பில் போகப் போவதாக தகவல்கள் வெளியாகின. தற்போது லத்திகா சரண் விடுப்பில் போக உள்துறை அமைச்சகம் அனுமதிஅளித்துள்ளது.
லத்திகா சரண் 52 நாள் விடுப்பில் செல்ல உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. மேலும் லத்திகா சரண் விடுப்பில் செல்வதால், போலாநாத் டிஜிபியாக கூடுதல் பொறுப்பு வகிப்பார் என்றும் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications