பணம் வாங்காமல் வாக்களியுங்கள்: தன்னார்வ அமைப்புகள் பிரசாரம்
நாகர்கோவில்: தேர்தலில் வக்காளர்கள் ஓட்டுக்கு பணம் வாங்க வேண்டாம் என்று கன்னியாகுமரி மாவட்டத்தில் தன்னார்வ அமைப்புகள் துண்டு பிரசுரங்கள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்து வருகின்றன.
தமிழகத்தில் சட்டசபை தேர்தலை நேர்மையாகவும், அமைதியான முறையிலும் நடந்த தேர்தல் ஆணையம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக வாக்காளர்கள் இந்த தேர்தலில் கண்டிப்பாக வாக்காளிக்க வேண்டும் என்பதற்காக நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்படுவதை தடுக்கவும், இது தொடர்பாக வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் வகையில் தன்னார்வ அமைப்புகள் உதவியுடன் துண்டு பிரசுரங்கள் கொடுத்து வருகிறது.
குமரி மாவட்டத்தில் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை, நுகர்வோர் பாதுகாப்பு குழு, பாசன துறை, இயற்கை பாதுகாப்பு பொது நல அறக்கட்டளை, மகளிர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், பூமி பாதுகாப்பு சங்கம், சாக்கோ டிரஸ்ட் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் துண்டு பிரசுரங்கள் வழியாக இந்த பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.












Click it and Unblock the Notifications