அரசியல்வாதிகளிடமிருந்து மது, பிரியாணி வாங்காதீங்க: நரேஷ்குப்தா வேண்டுகோள்
சென்னை: அரசியல்வாதிகள் மது பாட்டில், பிரியாணி தர வேண்டும் என்று வாக்காளர்கள் எதிர்பார்க்கவும் கூடாது, அவர்கள் கொடுத்தாலும் வாங்கவும் கூடாது என்று தமிழக முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா கேட்டுக் கொண்டுள்ளார்.
காந்திய அறக்கட்டளை மற்றும் காந்திய நிறுவன அமைப்புகள் இணைந்து தேர்தல் விழிப்புணர்வு பேரணி நடத்தின. இந்த பேரணி நேற்று காலை சென்னை காந்தி சிலையில் இருந்து துவங்கியது. இதற்கு தமிழக முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா தலைமை வகித்தார்.
இதில் மகாத்மா காந்தியிடம் 5 ஆண்டுகள் தனி செயலாளராக பணியாற்றிய கல்யாணம், காந்திய நிறுவன அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் பி.மாருதி, சி.வி.டி.ராகவலு, டி.கே. ஓசா, அம்புரோஸ், ஜான்தன்ராஜ், வழக்கறிஞர் பால சீனிவாசன், தமிழ்நாடு குடிசைவாழ் பெருமன்ற தலைவர் நேருதாசன், அமராவதி நதிநீர் பாசன இயக்கத்தின் பொதுச்செயலாளர் லிங்கம் சின்னசாமி, மற்றும் கல்லூரி மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பேரணியின்போது தேர்தல் விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்கள் மக்களுக்கு கொடுக்கப்பட்டன.
பேரணி முடிந்ததும் நரேஷ்குப்தா நிருபர்களிடம் கூறியதாவது,
அரசியல் வாதிகள் மது பாட்டில், பிரியாணி தர வேண்டும் என்று வாக்காளர்கள் எதிர்பார்க்கவும் கூடாது, அவர்கள் கொடுத்தாலும் வாங்கவும் கூடாது. வேட்பாளர்கள் மது பாட்டில்களோ, பிரியாணியோ கொடுக்கக்கூடாது.
அரசியல்வாதிகள் பிரசாரம் செய்கையில் கொள்கை முடிவுகளைப் பற்றித்தான் பேச வேண்டுமே தவிர, தனிப்பட்ட முறையில் யாரையும் தாக்கிப் பேசக்கூடாது.
அனைவரும் ஓட்டுபோடுவது புனிதமான கடமை என்று முன்னாள் ஜனாதிபதி கூறியிருக்கிறார். எனவே அனைவரும் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிக்க வேண்டும்.
விமான நிலையத்திற்கு சென்றால் சோதனை செய்வதுபோல தான் தற்போது தேர்தல் அதிகாரிகள் வாகனங்களை சோதனை செய்கிறார்கள்.
தகுந்த ஆவணங்களுடன் கொண்டு செல்லப்படும் பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவது இல்லை. உரிய ஆவணங்கள் இன்றி பெரிய தொகையை எடுத்துச்சென்றால், கட்டாயம் அந்த பணம் எப்படி வந்தது என்று விசாரணை நடத்தியாக வேண்டும். இதில் ஒன்றும் தவறு இல்லை. தேர்தலின் போது வாக்காளர்களுக்கு ஏராளமான பணம் கொடுக்கிறார்கள். ஆகவே வாகனங்களை நிறுத்தி சோதனையிடுவதில் எந்த தவறும் இல்லை என்றார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications