For Daily Alerts
Just In
31ல் கோவை, திருப்பூரில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து சுஷ்மா சுவராஜ் பிரசாரம்
கோவை: வரும் 31-ம் தேதி கோவை, திருப்பூரில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ் பிரசாரம் செய்யவிருக்கிறார்.
இது குறித்து கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் எம். சின்னராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பாவது,
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் செய்ய, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் வரும் வியாழக்கிழமை (மார்ச் 31) மாலை 3 மணிக்கு கோவை வருகிறார்.
அன்று மாலை 4.30 மணிக்கு திருப்பூர் டவுன்ஹால் திடலிலும், இரவு 7 மணிக்கு கோவை சிவானந்தா காலனியிலும் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
English summary
BJP senior leader Sushma Swaraj is coming to Tamil Nadu on march 31 to campaign for the party. She will campaign in Coimbatore and Tirupur on the same day.
Story first published: Monday, March 28, 2011, 17:29 [IST]