சிரியாவில் பேரணிக்கு அழைப்பு விடுத்துள்ள கிளர்ச்சியாளர்கள்–அதிபர் ஆஸாத்திற்கு நெருக்கடி
டமாஸ்கஸ்: அவசர நிலை பிரகடனத்தை விலக்கிக் கொள்ளாததைக் கண்டித்து சிரிய அதிபர் ஆஸாத்திற்கு எதிராக வெள்ளிக்கிழமை பேரணி நடத்துமாறு சிரியா கிளர்ச்சியாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
தாங்கள் வசிக்கும் ஊர்களில் உள்ள சதுக்கங்களில் கூடி அதிபருக்கு எதிராக போராட வேண்டும் என பேஸ்புக் சமூக வலைத்தளம் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு சிரியா புரட்சி 2011 எனவும் பெயரிடப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 15 – ம் தேதி தாரா நகரில் அதிபருக்கு எதிரான புரட்சியை பெயரிடப்படாத இயக்கம் தொடங்கியது. தற்போது கடற்கரை நகரமான லடாக்கியா வரை கிளர்ச்சி பரவியுள்ளது.
11 ஆண்டுகாலமாக அதிபர் பதவி வகிக்கும் ஆஸாத்திற்கு இது கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. 50 ஆண்டுகாலமாக அவசர நிலை பிரகடனம் அமுலில் இருக்கும் சிரியாவில் அரசுக்கு எதிராக கடந்த மூன்று வாரங்களாக புரட்சியாளர்கள் போரடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications