விஜயகாந்த் மீது பிரவீன் குமாரிடம் முடிதிருத்தும் தொழிலாளர்கள் பரபரப்பு புகார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்கம் தங்களை இழிவாகப் பேசிய தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளது.

தமிழ்நாடு மருத்துவர் சமூக மத்திய சங்கம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்கம் ஆகியவற்றின் ஒக்கியம் துரைப்பாக்கம் கிளைசார்பில் அதன் தலைவர் ரவிசங்கர் நேற்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் அலுவலகத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது புகார் ஒன்றை கொடுத்தார்.

அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது,

மனிதர்களுக்கு முடிதிருத்துவதும் அழகு கலையாக்கல் தொழிலை நாங்கள் பரம்பரை பரம்பரையாக செய்து வருகிறோம். இந்த தொழிலில் எங்கள் சாதி மக்கள் 40 லட்சம் பேர் உள்ளனர்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஓசூர் தொகுதியில் தனது கட்சி வேட்பாளரான டாக்டர் ஜானை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறுகையில், காங்கிரஸ் கட்சி தொண்டனுக்கு சீட் கொடுக்காமல் பியூட்டி பார்லர் நடத்தும் பெண்ணுக்கு சீட் கொடுத்துள்ளது. அவர்களை நம்பி நாட்டை ஒப்படைத்தால் நாடு சுடுகாடாகிவிடும் என்றார்.

அவர் எங்கள் சமுதாயத்தை கேவலப்படுத்திவிட்டார். எனவே, விஜயகாந்த் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+