மதிமுக வெளியேறியது வருத்தமாயிருக்கு: ஜி.ராமகிருஷ்ணன் பேச்சு
Subscribe to Oneindia Tamil
மதுரை: அதிமுக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறியது வருத்தம் அளிக்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மதுரையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
வாகன சோதனையின்போது வணிகர்கள் பாதிக்கப்படாமல் தேர்தல் ஆணையம் பார்த்துக்கொள்ள வேண்டும். எங்கள் கூட்டணியில் இருக்கையில் மதிமுக பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டது.
தற்போது கூட்டணியை விட்டு வெளியேறியுள்ளது எங்களுக்கு எல்லாம் வருத்தம் அளிக்கிறது. மீண்டும் கூட்டணியில் வந்து சேருமாறு வைகோவை அழைத்தோம். ஆனால் அவர் மறுத்துவிட்டார்.
160 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக தனித்து ஆட்சியமைக்கும். தொங்கு சட்டசபை வராது. எனவே இந்த தேர்தலில் அதிமுக கூட்டணி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெறும் என்றார்.












Click it and Unblock the Notifications